{"title":"KATTURAIGAL","description":"","products":[{"product_id":"aanava-kolaikalin-kaalam","title":"ஆணவக் கொலைகளின் காலம் | AANAVA KOLAIKALIN KAALAM","description":"AANAVA KOLAIKALIN KAALAM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவு கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன. சமூக உளவியலுக்கும் இக்கொலைகளுக்கும் இடையேயான உறவினையும் தமிழகம் ஈட்டியிருக்கும் சமூக நீதிப் பெயருக்கு முரணாக இக்கொலைகள் நீடிக்கும் அரசியல் மௌனத்திற்கான காரணங்களையும் இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. இன்று நமது அறிவுச்சூழலில் மேலோங்கியிருக்கும் - 'குற்றச்சாட்டு x தீர்வு' என முரண்பட்டு இயங்கும் விவாதமற்ற போக்குகளிலிருந்து விலகி கூர்மையான கேள்விகளையும் காரணங்களையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. கண்டனம், ஆவேசம், அடையாளம்சார் முழக்கம் ஆகிய அரசியல்வாதிகளின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கடந்து இக்கொலைகளை விரிந்த பின்புலத்தில் வைத்து களநிலவரத்தையும் அறிவுலகையும் புரிந்துகொள்வதன் அத்தியாவசியத்தை வலியுறுத்துகிறது. இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட காலங்களில் பரவலான கவனிப்பையும் விவாதத்தையும் பெற்ற கட்டுரைகளோடு சினிமா, புனைகதை, முகநூல் பதிவு, உண்மையறியும் அறிக்கை, நீதிமன்ற வழிகாட்டுதல் குறிப்பு ஆகியவற்றைத் தொட்டுப் புதிதாக எழுதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. ஆணவக் கொலை தொடர்பான விவாதத்திற்கு மட்டுமல்ல அதற்கான ஆவணரீதியான கையளிப்பாகவும் இத்தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது-.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165476020475,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/b6b4dfe5db57f277508c74bfed273edf.jpg?v=1705735440"},{"product_id":"aasaathi","title":"ஆசாத்தி","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165476446459,"sku":"","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/81AYRzwksCL._SY425.jpg?v=1708438380"},{"product_id":"adimai-aavanangal","title":"அடிமை ஆவணங்கள் | ADIMAI AAVANANGAL","description":"ADIMAI AAVANANGAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eதமிழகத்தில் அடிமைமுறை பற்றிய நூல்கள் மிகக் குறைவு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் 'தமிழகத்தில் அடிமைமுறை' நூல் குறிப்பிட்டது. அந்த வரிசையில் வருவது அ.கா. பெருமாளின் இந்த நூல். இதில் இருப்பவை அடிமைமுறை தொடர்பான மூல ஆவணங்கள். நாட்டார் வழக்காறுகளின் வழியும் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசிவரும் அ.கா. பெருமாள், இந்த நூலில் அதைப் பெருமளவில் பாவித்திருக்கிறார். இந்நூலின் முன்னுரை அரிய பல செய்திகளைக் கூறுவது. தென்குமரியில் உள்ள சில சாதிகளைப் பற்றிய அரிய செய்திகளைக் கதைப்பாடல்கள் வழி மீட்டெடுத்திருக்கிறார் பெருமாள். கடின உழைப்பு நூலில் தெரிகிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165478019323,"sku":"","price":160.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/2403d1d660cf3a8c3317946aeef40392.jpg?v=1705734977"},{"product_id":"agrakarathil-periyar","title":"அக்கிரகாரத்தில் பெரியார் | AGRAKARATHIL PERIYAR","description":"அக்ரகாரத்தில் பெரியார் - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள், சமஸ்கிருதக் கவிதை, மேற்கத்தியக் கலை, வாழ்க்கை வரலாறு, மேற்கத்திய நாவல், கிளீக்கெட், மக்கள் அறிவியல், சமூகவியல், தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பரந்து விரிந்த தளத்தினை உள்ளடக்கியுள்ளன. தமிழ்ச் செவ்வியல் மரபில் ஆசிரியருக்கான ஆய்வும் நவீன அறிவுத் துறைகள் சார்ந்த புரிதலும் கட்டுரைகளுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன. தெளிவான, சரளமான நடையில், நேரடியாகப் பேசுவதுபோல் அமைந்துள்ள இக்கட்டுரைகள், வாசகரின் அனுபவத்தை மேலும் விரிவடையச் செய்யும் ஆழமான பார்வை கொண்டவை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165479166203,"sku":"","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/3134f8e8b09faf2dd94099906df8ed70.jpg?v=1705734825"},{"product_id":"ayothithasar-vazhvum-boutham","title":"அயோத்திதாசர் : வாழும் பௌத்தம் | AYOTHITHASAR VAAZHUM BOUTHAM","description":"AYOTHITHASAR VAAZHUM BOUTHAM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நவீனகால தமிழ்ச் சிந்தனைகள்மீதும் செயல்பாடுகள்மீதும் மரபின் வேறிலிருந்து எழுந்துவந்து வினையாற்றிய அயோத்திதாசர் எனும் அரிய மூலிகைச்செடியை ஒத்த சிந்தனையாளர்கள் பற்றிய தனித்துவமான அவதானங்களை உரையாடல்களின்வழியே கண்டடைகிறது இத்தொகுப்பு. நவீன மனப்பாங்கால் கண்டறிய முடியாத கோணங்களை அவற்றின் மறைவிலிருந்து விலக்கி, விரிந்த பின்புலத்தில் வைத்துப் பேசிய அயோத்திதாசரை அவர் காலத்திலிருந்து சமகாலத்திலிருந்து மதிப்பிடப்பட்ட இத்தொகுப்பின் கட்டுரைகள். அயோத்திதாசர் என்னும் முழுமையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு அவை உருவானவிதம், அவர் ஒன்றைப் புரிந்துகொண்ட \u0026amp; விளக்கியமுறை,அவற்றின் சமகாலப் பொருத்தம் ஆகியவற்றைக் கட்டுரைகளில் முன்வைக்கிறார் ஸ்டாலின். முதன்முறையாக இதுவரை அயோத்திதாசர் சார்ந்த பதிவுகளிலிருந்து கவனம்பெறாத தரவுகளைத் திரட்டி எழுதப்பட்டிருப்பதும் இத்தொகுப்பின் தனித்துவம்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165486113019,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/54293b6dc94cbc3722d34719583f1d94.jpg?v=1705733054"},{"product_id":"azhagil-kothikkum-azhal","title":"அழகில் கொதிக்கும் அழல் | AZHAGIL KOTHIKKUM AZHAL","description":"அழகில் கொத்திக்கும் அழல் -\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும்,\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eஅது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும்,\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eநவீன கவிதைகளைச் சாட்டையெனவும் பாவித்து இசை சுழற்றுகையில் உண்மையில் பெரும் ஆட்டம் கழன்றுவிடுகிறது.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eகாமத்தையும் காதலையும் அழகையும் ஆன்மீக நிலையில் வைத்து பார்க்கும் இசையின் கண்களில் கொஞ்சம் திவ்யம் கூடியிருக்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e -\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eசாம்சன்\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165486145787,"sku":"","price":130.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/7524c10df93140fe5a8a7e11768eb883.jpg?v=1705732994"},{"product_id":"azhagin-asaivu","title":"அழகின் அசைவு | AZHAGIN ASAIVU","description":"அழகின் ஆசை -\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e தமிழ்ப் பேராசிரியராகிய தொ.ப. பார்வைக் கூர்மையில் புறநானூறு முதல் புதுக்கவிதை வரை, தொல்காப்பியத்திலிருந்து தற்காலப் பழகுதமிழ் வரை துலங்குவதை விட்டுச் சொல்லவேண்டியதில்லை.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eதாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவினர் ஒரு காலத்தில் சமயக் குருமார்களாக இருந்த வரலாற்றுச் சுவடுகள், மொட்டையடித்தல் என்னும் பௌத்த வழிபாட்டு முறையின் தொடர்ச்சி, சமண நியாய பரிபாலனப் பெரும்பள்ளி பகவதி அம்மன் கோயிலாக வழிபடுதல், வைணவ வழிபாட்டில் வைதிகத் 'தூய்மை' கடந்த வெகுமக்கள் பண்பாட்டுச் செல்வன் முருகன், வள்ளி மணவாளன் முருகன். என்றெல்லாம் ஆன காலத்தில் தெய்வானை சேர்ந்த கதை, துலுக்க நாச்சியார் அழகரின் காதலியான கதை, தாய்த்தெய்வ வழிபாட்டின் செல்வாக்குக் கத்தோலிக்கத் தேவமாதாவிடம் புலப்பட்ட வரலாறு, தைப்பூசத்தில் தமிழ்ப் புத்தாண்டு காணுதல் எனச் சாதிகள், சமயங்கள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் போன்ற பண்பாட்டின் பொதுப் போக்குகள் ஒருபுறம்.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eஉலையிலேயே உப்புப் போடுதல், உப்பைத் தனியே உணவுடன் சேர்த்தல் என்னும் தமிழர்களின் சமூகப் படிநிலைகள், தமிழகத்தின் இயல்பான தின்பண்டங்கள், வந்து புகுந்த அல்வா முதலியவை, இயல்பாக உடுப்பவை இரண்டுடன் புடைவை முதலியன வந்து புகுதல், உரல் உலகம் முதலிய புழங்குப் பொருட்கள், உறவுப் பெயர்களில் பொதிந்திருக்கும் மரபு, தவிட்டுத் தத்தெடுக்கும் வழக்கம், பேரப்பிள்ளைகளுக்கும் சடங்குகள் இறப்பிலும் விருந்தோம்பல், கருவுற்ற பெண் கணவனை இழந்த நிலையில் அதனை அறிவிக்கும் நாகரிகக் குறியீட்டு சடங்கு, மரபார்ந்த பல்லாங்குழி முதலிய விளையாட்டுகளின் சமூக-பொருளாதாரப் பின்னணி என உணவுகள், உடைகள், விளையாட்டுகள் என அன்றாடப் பண்பாட்டு அமிசங்கள் மறுபுறம்.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eஇன்னும் இன்னும் எத்தனையோ! அவரது அனைத்துப் பண்பாட்டுக் கட்டுரைகளின் பெருந்தொகுப்பாக வாய்த்த இந்நூல் அறிஞர்களின் ஆய்வுத் துல்லியம்; ஆய்வாளர்களுக்குக் கருத்துகோள் களஞ்சியம்; பொதுவாசகருக்கு முன்னறியாப் பல்சுவை விருந்து.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165486178555,"sku":"","price":295.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/4a552c118e269adf4aba28ce1aefb231.jpg?v=1705732922"},{"product_id":"chakkaravaalam","title":"சக்கரவாளம் | CHAKKARAVAALAM","description":"CHAKKARAVAALAM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eசமத்துவத்தை முன்மொழியும் பௌத்தம் ஒரு பெருங்கடல். தமிழ், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம், சீனம், ஜப்பான், திபெத், கொரியன், சிங்களம், ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. இவை அனைத்தையும், எந்தத் தனிமனிதராலும் அவரது வாழ்நாளுக்குள் முழுவதுமாகக் கற்றறிந்துவிட முடியாது. எனவே பௌத்த நூல்களில் சேகரமாகியிருக்கும் அறிவுச் செல்வத்தைத் தொகுத்தளிக்கும் நூல்களுக்கு, ஒரு சமகாலத் தேவையும் நியாயமும் எப்போதும் இருக்கவே செய்கிறது. பௌத்த ஞானப் பிழிவாக இந்நூலைத் தத்துவ எளிமையுடன் கூடிய நவீன மொழியில் படைத்துள்ளார் கணேஷ் வெங்கடராமன். நம் பௌத்த அறிவு மேலும் விரிய உதவுவதுடன், வாசிப்பின் மகிழ்வையும் இந்நூல் தூண்டிவிடுகிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165488144635,"sku":"","price":325.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/3eded0a226142f47ed0dfebaa9f1840e.jpg?v=1705732543"},{"product_id":"cinema-kottagai","title":"சினிமா கொட்டகை | CINEMA KOTTAGAI","description":"CINEMA KOTTAGAI - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇசை, நடனம், நாடகம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் போலல்லாமல், சினிமா முற்றிலும் தொழில்நுட்பத்தை சார்ந்த ஒன்று. அது மட்டுமல்ல இவைகளுள் மிகவும் இளையதும் சினிமாதான். ஆனால் ஆரம்பமுதல் அரசும், அறிவுலகமும், கல்விப்புலமும் இதை உதாசீனம் செய்ததால் அதன் சிறப்பு இயல்புகள் சரியாக கவனிக்கப்படவில்லை. ஒரு சீரிய கலை வடிவம் ஒரு பொழுதுபோக்கு சாதனமாக உறைந்து விட்டது.இந்த தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தமிழ்சினிமாவின் சில பரிமாணங்களை அவதானிக்கின்றன. மேலும், மௌன யுகத்தின் நிர்ப்பந்தங்கள் எவ்வாறு தமிழ்த்திரையின் அம்சங்களை உருவாக்கின? பாட்டு, நடனம் நம் திரைப்படங்களில் முதன்மையாக இடம் பெற்றது எப்படி, இந்திய, தமிழக வரலாறு ஒரு திரைக்கதைச் சுரங்கம் போன்றிருந்தாலும் வெகு சில வரலாற்றுப்படங்களே தமிழில் உருவாகியிருப்பது ஏன் போன்ற கேள்விகளையும் இந்நூல் எழுப்புகின்றது.இன்று அழகியலிலும், வடிவமைப்பிலும் உள்ளடங்கிய தமிழ்சினிமாவில் ஒரு புத்தகம் தெரிகின்றது. சில இயக்குநர்கள் சினிமா மொழியை கையாளுவதிலும், கதை சொல்லல் முறையிலும் ஒரு மேம்பாட்டை பதிவு செய்தல். ஆயினும் ஒரு சமூகத்தின் சினிமாவிற்கு இயக்குநர், தயாரிப்பாளர் மட்டும் பொறுப்பல்ல. திரைபற்றி எழுதுபவர்கள், படிப்பவர்கள், சிந்திப்பவர்கள் இவர்களுக்கும் பொறுப்புள்ளது என்பது இந்நூலாசிரியரின் நம்பிக்கை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165490536699,"sku":"","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/5d6655cdbbb86b1496e83c8589776727.jpg?v=1705732369"},{"product_id":"ciriyavil-thalaimaraivu","title":"சிரியாவில் தலைமறைவு நூலகம் | SIRIYAVIL THALAIMARAIVU NOOLAGAM","description":"SIRIYAVIL THALAIMARAIVU NOOLAGAM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003e2012 - 2016: பஷார் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக டமாஸ்கஸின் புறநகர் தராயா, கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அது கடும் முற்றுகைக்கு ஆளானது. முற்றுகை நான்கு நீடித்த ஆண்டுகள், அங்கு நரக வாழ்க்கைதான். பீப்பாய் குண்டு வெடிப்புகள், இரசாயன வாயுத் தாக்குதல்கள் போன்ற கொடுமைகளைத் தராயா எதிர்கொள்ள வேண்டி இருந்தது. வறுமை, பசி, பட்டினி ஆகியவை தலைவிரித்தாடின. பஷார் அல்-ஆசாத்தின் அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் போது, ​​சுமார் நாற்பது இளம் புரட்சியாளர்கள் விசித்திரமான சபதமொன்றை எடுத்துக் கொண்டனர். தகர்க்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கும் கீழ் ஆயிரக்கணக்கான நூல்கள் சிதறிக்கிடப்பதை அறிந்து, அவற்றைத் தோண்டியெடுத்து ஊரின் நிலத்தடிக்கு கீழ் ஒரு நூலகம் அமைக்கத் தீர்மானித்தது. புத்தகங்களை ஆயுதங்களாகக் கொண்டு எதிர்ப்பதென்பது ஓர் உருவகம்தான். எந்த ஓர் அரசியல் ஆதிக்கத்திற்கும், அல்லது மத ஆதிக்கத்திற்கும், அதனை ஓர் எதிர்ப்புக்குரலாகத்தான் கருதவேண்டும். ஒரு பக்கம் பஷார் அல்-ஆசாத்தும், இன்னொரு பக்கம் டாட்ச் எனும் தீவிரவாத இயக்கமும் தங்கள் ஆதிக்கத்தை வலுவடைய முயற்சி மேற்கொண்டிருக்கும்போது, ​​ஒரு மூன்றாவது சக்தியாக அந்தக் குரல் ஒலித்தது. 2011 ஆம் ஆண்டு ஆசாத்துக்கு எதிர்ப்பாக வெடித்த அமைதி ஆர்ப்பாட்டங்களை அரசு அடக்கி ஒடுக்கியது. அதுபற்றிய இக்கதை பிரெஞ்சு பத்திரிகை நிருபர் ஒருவருக்கும் போராளிகளுக்குமிடையே 'ஸ்கைப்' வழியே நடைபெற்ற உரையாடல்களின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. தன்னுரிமை, சகிப்புத்தன்மை, இலக்கியத்தின் மேலாண்மை ஆகியவற்றிற்கு இது ஒரு துதிப்பாடலாகும்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165490569467,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a3d4227616caa3f0ad1f56758e00fb5a.jpg?v=1705732295"},{"product_id":"dhesam-sathi-samayam","title":"தேசம் - சாதி - சமயம் | DESAM SAATHI SAMAYAM","description":"DESAM SATHI SAMAYAM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆண்பால், பெண்பால் என்னும் இருமையை மீளுருவாக்கம் செய்கின்ற பாலியல் அதிகாரம் தனித்த ஒன்றல்ல; சாதி, சமயம், தேசம் முதலியவற்றின் சொல்லாடல்களுடனும் அவற்றின் அதிகார விசைகளுடனும் இணைந்து விலகி செயல்படுவது அது. பின்னிப் பிணைந்திருக்கும் இந்த அதிகார விசைகளையும் அவற்றுக்குச் சவால்விடும் வகையில் சமூகத்திலும் கலையிலும் துலங்கும் பொருண்மையான எதிர்ப்புகளையும் இத்தொகுப்பின் கட்டுரைகள் ஆராய்கின்றன. மாதொருபாகன் நாவல், பரியேறும் பெருமாள் திரைப்படம், தமிழகம் தாண்டிய பெண்ணெழுத்து, பெண் விரோதச் சாதியக் கொலைகள், பசு அரசியல் போன்ற சமூக, பண்பாட்டு நிகழ்வுகளும் இலக்கியமும் கலையாக்கங்களும் கட்டுரைகளின் பேச்சுப் பொருட்கள்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165490798843,"sku":"","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/2385251b0382021d58c6a58875196964.jpg?v=1705731972"},{"product_id":"dravida-iyakkamum-vealalarum","title":"திராவிட இயக்கமும் வேளாளரும் | DRAVIDA IYAKKAMUM VAELALARUM","description":"திராவிட இயக்கம் வாழலாறும் - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eதிராவிட இயக்க வேளாளர் இயக்கமே என்ற கருத்துக்கோளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும்போது இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கிறது. திராவிட இயக்கத்தின் சமூக அடித்தளம், கருத்தியல் உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் வழிசெய்கின்றது. கிடைப்பதற்கரிய அக்கால நூல்கள், இதழ்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் முதலான ஆதாரங்களோடு வாதிடும் இந்நூல், தமிழகச் சமூக வரலாற்றுச் சிந்தனை வரலாற்றுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும். ஆ. இரா. வேங்கடாசலபதியின் விறுவிறுப்பான நடையில்...\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165490962683,"sku":"","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/804e7194696dd4f76f2ccf1e188ea25e.jpg?v=1705467928"},{"product_id":"enathu-india-kalachuvadu","title":"எனது இந்தியா | ENATHU INDIA","description":"ENATHU INDIA - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eசாகச விழாவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். முழுநேர எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவர். வனங்களையும் மனங்களையும் மிக நேர்த்தியாகச் சித்தரிப்பவர். அவரது படைப்புகளை வேட்டை இலக்கியம் என்று வகைப்படுத்தலாம்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165491323131,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a510e1bb52f20fcb2fe204cda2595a78.jpg?v=1705499704"},{"product_id":"ethirppu-kuralgal","title":"எதிர்ப்புக் குரல்கள் | ETHIRPPU KURALGAL","description":"எதிர்ப்பு குரல்கள் -\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e இந்திய நாகரிகம் பற்றிப் பேசும்போதெல்லாம், அகிம்சாவாதிகளான, சகிப்புத்தன்மையுடைய, உயர்ந்த லட்சியங்களுக்காகவே வாழ்ந்த மக்களைக் கொண்ட சமூகம் என்ற சித்திரமே முன்னிறுத்தப்படுகிறது; எதிர்ப்புக் குரல்கள் பற்றிய பேச்சே இருப்பதில்லை.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eரொமிலா தாப்பர் இந்த நூலில், இந்திய வரலாற்றின் மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த எதிர்ப்புக் குரல்களை எடுத்துக்கொண்டு, இந்தக் குரல்கள் இந்து சமயம் என்று இன்று \u003cbr data-mce-fragment=\"1\"\u003eபெயரிட்டு அழைக்கப்படும் சமயத்திலும் இந்தியச் சமூகத்திலும் ஏற்படுத்திய சலனங்களை ஆராய்கிறார். இந்தப் 'பிறன்'களுக்கும் நிலைபெற்றுவிட்ட 'தானு'க்கும் உள்ள உறவாடலையும் இந்த உறவாடல் பரஸ்பரம் உருவாக்கிய மாற்றங்களையும் சீரமைப்புகளையும் அறியத்தருகிறார். காந்தியின் சத்தியகிரகத்தின் வெற்றியின் பின்னால் இந்த எதிர்ப்பு மரபு நுட்பமாகப் பிரதிபலித்ததையும் காட்டுகிறார்.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eஒவ்வொரு நவீன சமூகத்திலும் பேச்சுரிமையின் ஒரு பகுதியாக எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமையும் குடிமகனுக்கு நிச்சயம் இருக்க வேண்டும். எதிர்ப்புக் கருத்துகளை விவாதத்திற்குட்படுத்த வேண்டும். எதிர்ப்பு என்றாலே வன்முறைப் புரட்சி என்று கொள்ளக் கூடாது; விடைகள் வேண்டி நிற்கும் தர்மசங்கடமான கேள்விகளைப் பண்பட்ட முறையில் விவாதிப்பதுதான் அதன் பொருள்.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165494403323,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a36291f3e68209ff588a99eabefb24f8.jpg?v=1705499520"},{"product_id":"ezhuga-nee-pulavan","title":"எழுக, நீ புலவன்! | EZHUGA NEE PULAVAN","description":"!EZHUGA NEE PULAVAN - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஉள்ளூர் ஜமீன்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி 'எழுக, நீ புலவன்!'. முக்கால் நூற்றாண்டுப் பாரதி ஆய்வுக்குப் பிறகும் இன்று வெளிச்சம் பெறாத செய்திகளைப் புதிய விவரங்களுடன் முன்வைக்கின்றன இந்நூல் கட்டுரைகள். பாரதி எழுதத் தவறிய எட்டயபுர வரலாறு, பாரதி வியந்த தாகூர், யார் என்று தெரியாமலேயே பாரதியை விவரித்த ஆங்கிலேய நிருபர் ஹென்றி நெவின்சன், பாரதி காலத்தின் முக்கிய சர்வதேச அரசியல் நிகழ்வான முதல் உலகப் போர் பற்றிய அவனுடைய பார்வை, சுயஎள்ளலும் கழிவிரக்கமும் பாரதி கூடிய சுயசரிதைகளின் பின்னணி, 'எழுக, நீ புலவன்!' என்ற பாரதிதாசனைப் பாரதி இனம்கண்டது, பாரதியின் எழுத்து வாழ்க்கை - இதழியல் பணி . . . எனப் பல்வேறு பொருள்களில் ஒளி பாய்ச்சும் கட்டுரைக் கோவை இந்நூல். பாரதி ஆய்வுக்கு முக்கியப் பங்காகியுள்ள ஆ. இரா. வேங்கடாசலபதியின் விறுவிறுப்பான நடையில் அமைந்த சுவையான கட்டுரைகள். ~ “பாரதி ஆய்வில் செயல்பட்டவர்கள் அநேகர். இந்த ஆய்வுகள் பொது வாசகனிடம் பாரதியை ஒரு திருஉருவாகவே அறிமுகம் செய்பவை; அவனுடைய செயல்பாடுகள் அனைத்தையும் அவதார லீலைகள் போன்று முன்வைப்பவை. அவற்றை இம்மையியல் சார்ந்ததாக நிலை நிறுத்தியிருப்பவர் ஆ. இரா. வேங்கடாசலபதி. பாரதியின் மேன்மைகளுடன் குறைகளையும் பிழைகளையும் சரிவுகளையும் ஆய்ந்து அவனுக்கு மானுட முகம் அளிப்பவை சலபதியின் ஆய்வுகளும் பதிப்புகளும்.” -- சுகுமாரன்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165494534395,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/ba0a3b951b20eb9fec7878bcbbbc3e31.jpg?v=1705731168"},{"product_id":"ezhuthakkilavi","title":"எழுதாக் கிளவி | EZHUTHAKKILAVI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎழுதக்கிலாவி - எழுத்தாளர் என்ற நிலையில் ஸ்டாலின் ராஜாங்கத்தைச் சமகாலச் சூழலின் வரலாற்றுப் பிரதிநிதியாகவே பார்க்க விரும்புகிறேன். ஆர்வத்தின் காரணமாகவோ ஆர்வக் கோளாறு காரணமாகவோ எழுத வந்தவர் அல்லர் என்பது என் கணிப்பு. 'சொல் என்பது செயல்' என்ற வாசகத்தின் அடையாளமாகவே அவரை முன்னிருத்த வேண்டும். எழுத்துக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை அதைச் சார்ந்த செயல்பாட்டுக்கும் விளைவுக்கும் அளிப்பவர். இது தன்னிச்சையான நடவடிக்கை அல்ல. சூழலின் தேவை. அந்தத் தேவையைத் தொடர்ந்து நிறைவேற்றுபவராகவே அவரை வழிமொழிகிறேன்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165494567163,"sku":"","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/179584463156e5d0e04118fa7fe1ee64.jpg?v=1705302312"},{"product_id":"gowri-lankeesh-maranaththul","title":"கௌரி லங்கேஷ் | GOWRI LANKESH","description":"GOWRI LANKESH - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eகௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துக்களை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருப்பது பாராட்டப்பட்டது. கௌரி உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது சந்தேகத்துக்கு இடமில்லாத எண்ணங்கள், சுதந்திரம், மனித நேயம், ஜனநாயகம் போன்றவற்றைப் பேசும் வாசகர்களைத் தொடர்ந்து சென்றடைந்து கொண்டே இருக்கும். குடிமகனாகவும சமூக செயல்பாட்டாள ராகவும் கட்டாயம் பேசப்பட வேண்டியவை என அவர் உணர்ந்துள்ள விஷயங்களை, அக்கறையை அவரது எழுத்துக்கள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. அப்படி பேசுவது தனது கடமை என்றும் அவர் நினைத்தார். தங்களது செயல்பாடுகளின்போது உயிரை இழந்து சிறந்த நெறிகளைக் காட்டிய பெண்கனின், ஆண்களின் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு. வாழ்க்கையை நேசித்து அவர் இழந்த உயிர், நெருக்கடியால் முற்றுகையிடப்பட்ட இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதால் நான் உறுதியாக இருக்கிறேன்.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165494862075,"sku":"","price":195.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/135b932860678529d6e9bcd9c0e32c68.jpg?v=1705731028"},{"product_id":"idhuve-jananayagam","title":"இதுவே சனநாயகம் | IDHUVEY JANANAYAGAM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eIDHUVEY JANANAYAGAM - அறிஞர் தொ. பரமசிவமன் ஒரு பண்பாட்டுத் தொல்லியலாளர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து காட்டும் போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றி வியக்க வைக்கின்றன. அந்த முறையியல் கொண்டு தொன்மைகளை மட்டுமன்றி அண்மைப் போக்குகளையும் கூட அகழ்ந்து காட்ட அவரால் முடிகிறது. இத்தொகுப்பு 'சமயமும் வழிபாடும்', 'உறவும் முறையும்' 'ஆளுமைகள்', 'மதிப்புரைகள்', 'ஆய்வுப்பார்வை' போன்ற அவரது கட்டுரைகளை அடக்க முயன்றுள்ளனர்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165495058683,"sku":"","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/eb564f917b1def6ffb0151c80f65a978.jpg?v=1705297154"},{"product_id":"ilakkiyamum-ilakkiyavathigalum","title":"இலக்கியமும் இலக்கியவாதிகளும் | ILAKKIYAMUM ILAKKIYAVATHIGALUM","description":"ILAKKIYAMUM ILAKKIYAVATHIGALUM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eமுன்னோடிகள், முன் தலைமுறையினர், சமகாலத்தவர் ஆகிய பல்வேறு காலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி வண்ணநிலவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.\u003c\/span\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e'பொதுவாகவே எந்த எழுத்துக் கலைஞனது படைப்புகளிலும் அவனது அகவுலகம் விரிந்து கிடக்கிறது' என்று வண்ணநிலவன் நம்புகிறார். இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் பிரித்துப் பார்ப்பதில்லை. படைப்பின் நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டுகிறார். அதே இயல்பில் படைப்பாளிகளைக் குறித்தும் பேசுகிறார். முடிவானவையாக இல்லாமல் அபிப்பிராயங்களாகவே பகிர்ந்துகொள்கிறார். நீண்ட காலப் படைப்பனுபவமும் இலக்கியப் பட்டறிவும் வண்ணநிலவனின் கருத்துகளைப் பொருட்படுத்திச் சிந்திக்க வாசகரைத் தூண்டுகின்றன.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165495091451,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/b43a46a91ba0bb9ff1c1e246c4b8c7e6.jpg?v=1705498891"},{"product_id":"ilakkiyamum-thiranaivum","title":"இலக்கியமும் திறனாய்வும் | ILAKKIYAMUM THIRANAIVUM","description":"ILAKKIYAMUM THIRANAIVUM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eமொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்கு அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு தனித்துறை என்பதை உணர்த்துகிறார். தமிழின் நவீனத் திறனாய்வுவரலாற்றுப் போக்குகளை வகைப்படுத்தி, அவற்றின் வன்மை மென்மைகளைக் காட்டுகிறார். மாணவர்கள் அக்கருத்துகளைப் பொருத்திப் பயில்வதற்காகப் பிற்சேர்க்கையாகச் சில கவிதைப் பகுதிகளையும் தந்துள்ளார். இந்த நூல் வெளிவந்ததற்குப் பின்னான அரை தமிழில் பல்வேறு திறனாய்வுக் கோட்பாடுகள் எழுச்சி பெற்றுள்ளன. இந்தப் போக்குகளை விளங்கிக்கொள்ள வழிகாட்டியாகவும் 'இலக்கியமும் திறனாய்வும்' திகழ்கிறது. பொருள் ஆழங்குன்றாமல் விளங்க வைக்கிறது கைலாசபதியின் தமிழ் நடை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165495156987,"sku":"","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/354293aa7684552605d9ba9ca4a1348d.jpg?v=1705730859"},{"product_id":"ilakkiyap-payanaggalum-tamilar-varalarum","title":"இலக்கியப் பயணங்களும் தமிழர் வரலாறும் | ILAKKIYA PAYANANGALUM TAMILAR VARALARUM","description":"ILAKKIYA PAYANANGALUM TAMILAR VARALARUM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eதமிழர் வரலாறும் பண்பாடும் இலக்கியத்தோடு சங்ககாலந்தொட்டு இணைந்து வளர்ந்து வந்துள்ளன. இலக்கியங்களில் பல வகைகள், பல உத்திகள், பல கருத்தாடல்கள் இருக்கக் காண்கிறோம். இவ்வகை இலக்கிய உத்திகள் அனைத்தும் தமிழர்களின் பண்பாடாக வெளிவந்துள்ளதுடன் அது தொடர்ந்து வளர்ந்து வருகிறது. புதுப்புதுக் கோட்பாடுகளை ஏற்படுத்தித் தமிழர் வாழ்வு மேன்மேலும் வளம்பெற வைத்தவை தமிழ் இலக்கியங்கள். அவை வளர்ந்த முகத்தான் மொழியும் வளர்ந்திருக்கிறது. தமிழை வெவ்வேறு விதத்தில் கையாளும்போது அது காலப் போக்கில் பல மாற்றங்களை நேர்கொள்கிறது. இவ்வகையில் சங்ககாலத் தமிழையும் இக்காலத் தமிழையும் இலக்கியப் பண்போடு இணைத்து நோக்கும் இந்நூல், இவ்வகை இலக்கியச் சுவடுகளை இலக்கியத் திறனாய்வோடு ஆய்ந்தறிந்து தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றை இணைக்கிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165495746811,"sku":"","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/6b5cfaad5d5c2736b1cadf38cc240ff2.jpg?v=1705467429"},{"product_id":"indiya-naayinangal","title":"இந்திய நாயினங்கள் | INDIYA NAAYINANGAL","description":"INDIYA NAAYINANGAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனிதரை ஆண்ட்டி நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற வளர்ப்பு விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது. இமாலயத்திலிருந்து குமரிவரை இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு புவியியல் சூழலுக்கேற்ற பரிணாமத் தகவமைப்பில் உருவாகியிருந்த பல்வேறு நாயினங்களில் பல அழிந்து விட்டன. காலனித்துவ ஆட்சியில் மக்களின் கவனத்தை மேலைநாட்டு நாய்கள் ஈர்த்தன. எஞ்சியிருக்கும் சில உள்ளூர் நாய்களின் தனித்துவமும் அக்கறையின்மையால் சீரழிந்து வருகிறது. நம்நாட்டு உயிரினப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்புக் கூறான இருபத்தைந்து நாயினங்களை நூலாசிரியர் பதிவு செய்கிறார்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165495943419,"sku":"","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/4f0db597b1f0931da34a5cb9b26317ae.jpg?v=1705498691"},{"product_id":"ithu-muthulingathin-neram","title":"இது முத்துலிங்கத்தின் நேரம்","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165496533243,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/71ZCgk574FL._SY425.jpg?v=1708675726"},{"product_id":"janakiraman","title":"ஜானகிராமம் | JANAKIRAMAM","description":"ஜானகிராமன் - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅடிப்படையான மானுட உணர்வுகளின் எல்லையின்மையைத் தம் புனைகதைகளில் திரும்பத் திரும்ப எழுதிய தி. ஜானகிராமன், ஆண் பெண் என்ற வெளிபேதத்தைக் கடந்து உயிர் என்ற உள்விரிவை நோக்கி முன்நகர்ந்தவர். நூற்றாண்டு காணும் தி.ஜா. (1921 - 2021) பற்றிய 102 விமர்சனக் கட்டுரைகளின் பெருந்தொகுதியே இந்நூல். அழகியல்வாதிகள், இடதுசாரிகள், திராவிடவாதிகள், பெண்ணியவாதிகள், உளவியல் நோக்கினர், விளிம்பைப் போற்றுவோர், நவீனத்துவம், பின்நவீனர்கள், கல்வியாளர்கள் எனத் தம்முள் முரண்படும் பல தரப்பினரையும் ஒன்றிணைக்கும் ஒரு மகத்தான விசயமாகத் தி. ஜானகிராமன் மறுஉயிர்ப்புப் பெறுவதன் மூலம் இந்நூல்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165496598779,"sku":"","price":1175.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/565b8e4741651478ec25453e68fed495.jpg?v=1705730089"},{"product_id":"kadavulukku-velai-seipavar","title":"கடவுளுக்கு வேலை செய்பவர் | KADAVULUKKU VELAI SEIPAVAR","description":"KADAVULUKKU VELAI SEIPAVAR - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உண்டு. நகை உண்டு. தமிழும் கவிதையும் உளது. இவை யாவும் இலக்கியமாகும் ரசவாதம் இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உண்டு. ஒரு பக்கத்திலேனும் கொட்டாவி இல்லை.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165498433787,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/804c35c3c75f053870aa62789263cc9a.jpg?v=1705391375"},{"product_id":"kalatchara-kavanippugal","title":"கலாச்சாரக் கவனிப்புகள் | KALATCHARA KAVANIPPUGAL","description":"KALATCHARA KAVANIPPUGAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eயாழ்ப்பாணக் கச்சேரியடியில் 'இவ்விடத்தில் துப்பாதீர்கள்' என்ற அறிவிப்பு எழுதிவைத்தால் 'எந்த மானமுள்ள யாழ்ப்பாணத்தானும் துப்பத்தான் செய்வான்' என்று எழுதும் எள்ளலும் தள்ளலும் கொண்ட இவருடைய தமிழ் எழுத்துக்காகவே கலைத்துப் பிடித்து நட்பானேன். ஆழமும் விரிவும் மாத்திரமல்ல புன்னகையுடனும் படிக்கக்கூடிய எழுத்துநடை கைவரப் பெற்றவர். சச்சிதானந்தன் சுகிர்தராஜா வள்ளுவன் குறிப்பிட்ட நுண் மான் - நுழை புலம். தான் சார்ந்த துறையில் பெரிய ஆளுமை. இவர் துறைசார்ந்த அறிஞர்கள் அறிந்த பெருந்தகை. வாழையடி வாழையாக வரும் இலங்கைப் புலமை மரபில் வரும் இவர் மற்ற புலமையாளர்களைப் போல் தான் சொல்லவாற விடயத்தை முறைத்தபடியோ விறைத்தபடியோ சொல்லாமல் சிரித்துக்கொண்டு உறைக்கச் சொல்லும் எள்ளல் ததும்பும் புதுநடைக்குச் சொந்தக்காரர்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165500367099,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/915a82e37f20ee038df2c2a9d324f946.jpg?v=1705390737"},{"product_id":"kanam-kortarey","title":"கனம் கோர்ட்டாரே | KANAM KORTAREY","description":"KANAM KORTAREY - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eநீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்து நீதித் துறை குறித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் அதற்காகத் தன் குரலை இக்கட்டுரைகளில் வலுவாகப் பதிவுசெய்துள்ளார். நீதித் துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் கட்டுரைகள் மூலம் தகர்க்கிறார்கள். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களைத் தகுந்த தரக்கத்துடன் விமர்சிக்கிறார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் வரலாற்றுச் சுவாரஸ்யங்களைச் சுவைபடச் சொல்கிறார். விளம்பரப் பலகைகளின் கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதை சமூக ஆய்வாளரின் பார்வையிலிருந்து ஆராய்கிறார். சந்துருவுக்கு நெருக்கமான வாசக மொழி கைகூடியிருக்கிறது. சட்டங்களின், சட்டத் திருத்தங்களின் பின்னணிகளை நுட்பமாகக் குறிப்பிடும் இத்தொகுப்பு சட்டத் துறையினருக்கு ஒரு கையேடாகிறது. சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளையும் சட்டம் என்ற சட்டத்தின் மூலம் பார்க்கும் சந்துரு நீதிமன்றம் எளிய மக்களும் அணுகக்கூடிய மக்கள் மன்றம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரைகளின் மூலம் விதைக்கிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165500629243,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/f1389204b40320ff815834ace6d43631.jpg?v=1705390497"},{"product_id":"kannadi-sorgal","title":"கண்ணாடிச் சொற்கள் | KANNADI SORKAL","description":"கண்ணாடி சொர்கல் -\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eமொழிபெயர்ப்பாளராகவே அதிகம் அறியப்பட்ட ஜி.குப்புசாமியின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது.குப்புசாமி விரிவான வாசிப்பும் பல்துறை சார்ந்த ஆழமான அறிவும் தேர்ந்த இலக்கிய ரசனையும்\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eகூர்மையான\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eஇலக்கியப் பார்வையும் கொண்டவர். இலக்கியம், கிரிக்கெட், டென்னிஸ், திரையிசை, அரசியல் என அவர் ஆர்வத்தின் எல்லைகள்\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eவிரிந்து பரந்தவை. தான் ஆர்வம் செலுத்தும் எல்லாத் துறைகளிலும் ஆழ்ந்த ஈடுபாட்டைக்\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eகொண்டவர். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்த பார்வையைக் கொண்டிருப்பவர்.தான் ரசித்துப் படித்த, பார்த்த, கேட்ட, வியந்த, கற்றுக்கொண்ட ஆளுமைகளையும் படைப்புகளையும் பற்றிக் குப்புசாமி\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eவிரிவாகவும் காத்திரமாகவும் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். உலக இலக்கியம்முதல் உள்ளூர் இலக்கியம்வரை; சார்வாகன்முதல் சரமாகோவரை; எஸ்.பி. பாலசுப்பிரமணியம்முதல் ரோஜர்\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eஃபெடரர்வரை எனப் பல்வேறு படைப்புகளையும் ஆளுமைகளையும் பற்றிய விரிவான சொற்சித்திரங்களைக் கொண்ட\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eநூல் இது. மிகுதியும் அறிவுத் தளத்தில் நிதானமாக இயங்கும் குப்புசாமியின் எழுத்துக்குத் தேவையான இடங்களின் உணர்ச்சிப் பிரவாகமாகப் பாயவும் செய்கிறது.\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eஇந்நூலில் இடம்பெறும் ஆளுமைகள், படைப்புகள் ஆகியவற்றை அறியாதவர்களுக்கு இவை சிறந்த அறிமுகங்களாகும்\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eஅமையும். ஏற்கனவே அறிந்தவர்களுக்குப் புதிய திறப்புகள் சாத்தியமாகும்.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165500825851,"sku":"","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/ccc4c88845f0e011d0f256ffd85749c9.jpg?v=1705491473"},{"product_id":"karnataka-isaiyin-kathai","title":"கர்நாடக இசையின் கதை","description":"கர்நாடக இசையின் கதை -\n \u003cp data-mce-fragment=\"1\"\u003eஇசையுலகத்திற்கு உள்ளும் வெளியிலும் நிகழ்ந்துவரும் பல்வேறு விவாதங்கள், எழுப்பப்படும் கேள்விகள் ஆகியவை முதல்முறையாக இந்த நூலில்தான் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. இசையுலகினுள் நிலவும் சாதி, பாலினம், மொழி, மதம் சார்ந்த பாகுபாடுகளைப் பிரச்சனைப்படுத்தி விவாதிக்கிறார் கிருஷ்ணா. வாய்ப்பாட்டுக் கலைஞர்களுக்கும் பிற கலைஞர்களுக்கும் இடையே இருக்கும் படிநிலைகள், கச்சேரிக்கான கட்டமைப்பு, பாடல்களின் தேர்வு ஆகியவற்றையும் கிருஷ்ணா கேள்விக்கு உட்படுத்துகிறார்.\u003c\/p\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003eகலை வடிவின் நோக்கம் அதன் வெளிப்பாட்டுடன் இருக்கும் உறவை முன்வைத்து இசையின் பல கூறுகளை விவரிக்கிறது. இசைக்கும் இறைமை நிகழ்கலம் ஆகியவற்றிற்கும் இடையிலான உறவுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறார். கர்நாடகா, இந்துஸ்தானி இசை வடிவங்களை ஒப்பிட்டு விவாதிக்கிறார். நாட்டியத்திற்கும் இசைக்குமான உறவைப் பற்றியும் பேசுகிறார். இசை வரலாறு குறித்த சுருக்கமான சித்திரத்தையும் தீட்டியிருக்கிறார்.\u003c\/p\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003eகிருஷ்ணாவின் சிந்தனைகளையும் கருத்துகளையும் ஒருவர் நிராகரிக்கலாம். ஆனால் அவருடைய ஆழ்ந்த அக்கறையையும் உழைப்பையும் மறுக்க முடியாது. அவற்றை முன்வைப்பதில் அவர் கைக்கொள்ளும் அறிவார்த்தமான முறைமையை மதிக்காமல் இருக்க முடியாது. இந்த நூலின் ஆகப்பெரிய வலிமை இதுதான்.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165501087995,"sku":"","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/8df5b0e0a6edfd10dde163e782cefd9a.jpg?v=1705489645"},{"product_id":"karungadalum-kalaikadalum","title":"கருங்கடலும் கலைக்கடலும் | KARUNGADALUM KALAIKADALUM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகருங்கடலும் கலைகடலும் - தி. ஜானகிராமனின் 'கருங்கடலும் கலைக்கடலும்' பயண இலக்கியம். தி. ஜானகிராமன் பண்பாட்டு பரிமாற்றத் திட்டத்தின்கீழ் ரொமானியாவுக்கும் செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்தது பற்றி எழுதிய பயணக் கதை. சோமலெ, ஏ.கே. செட்டியார் போன்ற பயணக்கட்டுரை எழுத்தாளர்களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஜானகிராமனின் பயணம் பற்றிய எழுத்து. அடிப்படையில் தி.ஜா. புனைகதை எழுத்தாளர் என்பதால் தனது அனுபவங்களைக் கதையாகவே சொல்லிக்கொண்டு போகிறார். அவர் சென்ற நாடுகளின் பூகோளரீதியான தகவல்கள் இந்த நூலில் இல்லை. தி.ஜா. தனக்கே உரிய பாணியில் அந்த நாடுகளை நம்மைக் காணவைக்கிறார். தாம் கண்ட தெருக்களில் மிகமிக ஓங்கி நிற்கும் சூன்யத்தைப் பற்றிப் பேசுகிறார். தலைக்குமேல் இஷ்ஷென்று பறந்துபோகும் பறவையை ரசிக்கிறார். சந்தடியற்ற தெருக்களில் புலன்கள் கூர்ந்துவிடுவதால் சிறிய மணங்களைக்கூட நுகரமுடிகிறது என்கிறார். வெள்ளைக்காரர் ஒருவரிடம் உங்கள் கண் எப்படி இவ்வளவு நீலமாக இருக்கிறது என்று குழந்தைபோல் கேட்கிறார். செக்கோஸ்லவாகியாவில் பனி பொழிவதை லட்சம் தும்பைப் பூக்கள் வெள்ளைவெளேரென்று வெளியே உதிர்ந்துகொண்டிருந் தன என்று கவிதை ஆக்குகிறார். மனிதர்களை, நகரங்களை, சாப்பாட்டை ரசனையோடு வர்ணிக்கிறார். பயண அனுபவத்தை நாவலின் சுவாரஸ்யத்துடன் படைத்து தமிழ் வாசகனுக்கு விருந்தாக்குகிறார் தி.ஜா. -தஞ்சாவூர்க் கவிராயர்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165501186299,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/20379338b349d62c0e5f921744a91628.jpg?v=1705300653"},{"product_id":"kashmirr","title":"காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை | KASHMIR: SEETRUM POTHINTHA PAARVAI","description":"காஷ்மீர்: SEETRUM POTHINTHA PAARVAI - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eகாஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமையைப் பிடிக்கும் கட்டுரைகள். வரலாற்றில் 'முன்னேற்ற' படுகொலையும் கை கோர்த்து நடைபோட்டுள்ளமையை இக்கட்டுரைகள் தெளிவுபடுத்துகின்றன. 2001இல் இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டதைப் பற்றிய மூடமந்திர விசாரணையை ஆராய்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும், ஊடகங்களும் அரசும் கூட்டாகச் செயல்படுவதை அம்பலப்படுத்துகிறது. அப்சல் குரு வாழ்க்கையும் தூக்கிலிடப்பட்டதையும் கண்டிக்கின்றன. நுண்ணிய அரசியல் பார்வையை கூர்மையான நடையில் வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165501382907,"sku":"","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/80c82b7b0566ecb5860f98f26ac9ed17.jpg?v=1705389934"},{"product_id":"kavithaiyin-antharangam","title":"கவிதையின் அந்தரங்கம் | KAVITHAIYIN ANTHARANGAM","description":"கவிதையின் அந்தரங்கம் -\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e நவீன கவிதையை எப்படி புரிந்துகொள்வது? நவீன கவிதைகளின் மொத்தச் சொற்களைக் காட்டிலும் கூடுதலான அளவில் அந்தக் கவிதைகளைப் பற்றிக் கவிஞர்களும் விமர்சகர்களும் வாசகர்களும் எழுதியிருக்கிறார்கள்; என்றாலும் நவீன கவிதையின் ரகசியங்கள் பிடிபடாமல் நழுவுகின்றன.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eகவிதைக்குள்ளிருந்து கவிதையைப் பேசுவதன் மூலம் இந்தப் புதிரை விடுவிக்க முயல்கிறார் க.வை. பழனிசாமி. தமிழின் முக்கியமான கவிஞர்களில் 14 பேரின் கவிதைகளை முன்வைத்து அவர் இந்தச் சவாலை மேற்கொள்கிறார். கவிதைக்குள்ளேயே அதைத் திறக்கும் திறவுகோல் இருப்பதைத் தன் கூர்மையான, சொற்களை ஊடுருவும் வாசிப்பினூடே கண்டடைகிறார். அந்த அனுபவத்தைப் பூடகமற்ற சொற்களின் மூலம் பகிர்ந்துகொள்கிறார்.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eந. பிச்சமூர்த்திமுதல் அனார்வரை பல தலைமுறைகளைச் சேர்ந்த, பல்வேறு கவித்துவ அணுகுமுறைகள் கொண்ட கவிஞர்களின் கவிதைகளினூடே நிதானமாகப் பயணம் செய்யும் பழனிசாமி, அந்தப் பயணத்தில் தான் அடைந்த தரிசனங்களை இந்நூலில் முன்வைக்கிறார். கவிதையின் ரகசியங்கள், பல்வேறு கவியுலகங்கள்\u003c\/p\u003e\n\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e ஆகியவற்றுடன், மாறுபட்ட கவித்துவப் பார்வைகளும் இதில் வெளிப்படுகின்றன.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eகவிஞரும் விமர்சகருமான பழனிசாமியின் இந்த முயற்சி, நவீன கவிதையை வாசகரின் மனத்துக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து நிறுத்துகிறது. கவிதையை அணுகுவதற்கான மாறுபட்ட முறைமைகளை அறிமுகப்படுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165502038267,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/532dcb719f1fa24d01eced8ab847f24f.jpg?v=1705728797"},{"product_id":"ketta-varthai-pesuvom","title":"கெட்ட வார்த்தை பேசுவோம் | KETTA VAARTHAI PESUVOM","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eKETTA VAARTHAI PESUVOM-\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eசமூக\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e,\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபண்பாட்டு\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e,\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eமொழி\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e,\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eவரலாற்று\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வுக்கு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனிதச்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசெயல்பாடுகளின்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎந்தப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபகுதியும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவிலக்காக\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇருக்க\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமுடியாது\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e.\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனித\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவாசனை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமூக்கை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎட்டியதும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇரை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகிட்டியதென\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமகிழும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதேவதைக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகதை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅரக்கனைப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபற்றிப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபிரெஞ்சு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவரலாற்றாசிரியர்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமார்க்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபிளாக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகுறிப்பிடுவார்\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e.\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eசமூகவியல்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வாளர்களும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅப்படித்தான்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇருக்க\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவேண்டும்\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e.\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனித\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவாழ்க்கை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதொடர்புடையது\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஎதுவாயினும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅது\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வுத்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதேட்டத்தைக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகிளர்த்த\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவேண்டும்\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e.\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eகெட்ட\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவார்த்தைகளிலிருந்து\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவீசுவதோ\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eமனிதத்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதுர்வாடை\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e. '\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eகெட்ட\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவார்த்தை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபேசுவோம்\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e'\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇதை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகவனப்படுத்திக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகெட்ட\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவார்த்தைகள்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபற்றிய\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆய்வுக்குக்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகதவு\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதிறந்திருக்கிறது\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e.\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபெருமாள்முருகனை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eநினைத்துப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபெருமை\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகொள்ளப்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபல\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகாரணங்கள்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஉண்டு\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e.\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்த\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eநூலும்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅதில்\u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசேர்த்தி\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165502431483,"sku":"","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/3541aca22d5668d60d1ab630b5664a8e.jpg?v=1705300567"},{"product_id":"kizhakkum-merkkum","title":"கிழக்கும் மேற்கும் | KIZHAKKUM MERKKUM","description":"கீழ்க்கும் மேர்க்கும் -\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம். இளையோருக்கு, குறிப்பாகக் குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல வாசிப்புக்கான நூலைத் தாண்டி, வழிகாட்டியாகவும் அமையும்.\u003c\/p\u003e\n\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e அணிந்துரையில் சமஸ்\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eசீனாவின் வளர்ச்சியும் வறுமை ஒழிப்பும் முன்னுதாரணம் இல்லாதவை. இவை சீனாவின் ஒரு முகம். யதேச்சதிகாரமும் மேலாதிக்கமும் இன்னொரு முகம். இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகள் இந்த இரண்டு முகங்களையும் படம்பிடிக்கின்றன.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eஹாங்காங்கின் சுயாட்சியையும் தைவானின் எழுச்சியையும் கலங்கிக் கிடக்கும் தென் சீனக் கடலையும் வரலாற்றுக்கு முகம்கொடுக்க மறுக்கும் ஜப்பானையும் கிழக்காசியக் கட்டுரைகள் பேசுகின்றன. அகதிகள் ஆக முடியாத ஈழத் தமிழர்களும், எவராலும் கவனிக்கப்படாத பர்மியத் தமிழர்களும் நூலில் இடம்பெறுகிறார்கள். உக்ரைன் போரின் நதிமூலமும் இந்திய - சீன எல்லைச் சிக்கலும் விரிவாகப் பேசப்படுகின்றன.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eஆஸ்திரேலியாவின் பகல் வெளிச்ச மாற்றமும் அமெரிக்க ஜனநாயகத்தின் போதனைகளும் தமிழில் அதிகம் பேசப்படாத பன்னாட்டுப் பிரச்சினைகள் பலவும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165503054075,"sku":"","price":290.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/aa2d43750489169b9519b48f56657c19.jpg?v=1705728434"},{"product_id":"kovilgal-arinthathum-ariyathathum","title":"கோவில்கல் : அறிந்ததும் அறியாததும்","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165503545595,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/51BbJqXeroL._SY445_SX342.jpg?v=1708676160"},{"product_id":"kovil-nilam-saathi","title":"கோவில்-நிலம்-சாதி | KOVIL-NILAM-SAATHI","description":"KOVIL-NILAM-SAATHI - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eகோவில்களைப் பக்தியின் இருப்பிடமாகப் பார்ப்பதுதான் இயல்பானதாக நம் பொதுமனத்தில் பதிந்து உள்ளது. கோவில்கள் கட்டப்பட்டதைப் புனித அறச்செயல்களாகவும், அரசர்களின், வணிகர்களின் சாதனைகளாகவும் மட்டுமே வரலாற்று நூல்கள் காட்டுகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் வளமான நிலங்கள், இலட்சக்கணக்கான ஏக்கர்கள் கோயில்களுக்கு உடைமையாக இருந்தன, தமிழ்நாட்டுக் கிராமங்களின் நிர்வாகத்தைக் கோயில் சபைகளே நடத்திவந்தன என்பதையும் பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கோவிலுக்கும் நில உடைமைக்கும் அவசிய நிர்வகித்த சாதிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்வதன் மூலம்தான் தமிழக வரலாற்றை விளக்க முடியும். அந்தப் பணியை இந்நூலின் மூலம் பொ. வேல்சாமி தொடங்கிவைத்துள்ளார்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165503643899,"sku":"","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/07aec086808170280288c0c7aa2255b4.jpg?v=1705487809"},{"product_id":"malai-malarum-noi","title":"மாலை மலரும் நோய் | MALAI MALARUM NOI","description":"MALAI MALARUM NOI - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eதிருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் கண்டுபிடிக்கும் இசை. பின், எந்தக்காலத்தில் எந்தக்காலமோ எனப் பரவசம் கொள்கிறார். அந்தப் பரவசமே மேதைமையாக, நகையுணர்ச்சியாக, உபாசனையாக, விளையாட்டாக, திகைப்பாக, குழந்தைமையாக நூலெங்கும் வெளிப்பட, கடைசிப் பக்கத்திற்குப் பின்பு, காதலின் அத்தனை ஆட்டங்களையும் அறிந்த ஒரு கவிஞனாக, தோழனாக வள்ளுவன் எழுந்து வருவதைப் பார்க்கிறோம். அறத்தையும் பொருளையும் சற்றே நெகிழ்த்திவிட்டு அவனை அப்போது அறியவும் நெருங்கவும் முயல்வது நமக்கு அவசியமானதும்கூட. ஆசையின் எளிய ஜீவன்கள்தானே நாமெல்லாம் இல்லையா?\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165505806587,"sku":"","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/1cd0b2c1fd8c32930bf0e9c5503581d2.jpg?v=1705726577"},{"product_id":"manathil-nirkkum-manavargal","title":"மனதில் நிற்கும் மாணவர்கள் | MANATHIL NIRKKUM MANAVARGAL","description":"MANATHIL NIRKKUM MANAVARGAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஓர் ஆசிரியர் தம் மாணவர்களைக் குறித்து எழுதியுள்ள முன்னோடி நூல். தம்மிடம் பயின்ற மாணவர்களைப் பற்றிப் பெருமாள்முருகன் எழுதிய நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு. அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையாக உயர்கல்வி கற்க வருபவர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திறன், குடும்பச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நுட்பமான பார்வையுடன் இக்கட்டுரைகள் விவரிக்கின்றன. நம் கல்வி முறை பற்றிய பல்வேறு கோணங்களைப் போகிற போக்கில் சுட்டுச் செல்லும் தெறிப்புகள் நூலெங்கும் விரவியுள்ளன. எளிய மொழிநடையும் சுவையான சம்பவங்களுமாக வாசிப்புத்தன்மை கொண்ட நூல் இது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165506101499,"sku":"","price":270.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/89941ff15c95d505adfe2d158bc9b297.jpg?v=1705726304"},{"product_id":"manjal-mahimai","title":"மஞ்சள் மகிமை ","description":"\u003cdiv class=\"row d-flex justify-content-center\" data-mce-fragment=\"1\"\u003e\n\n\u003cdiv class=\"col-lg-9 col-12\" data-mce-fragment=\"1\"\u003e\n\n\u003cdiv class=\"product__info__detailed\" data-mce-fragment=\"1\"\u003e\n\n\u003cdiv class=\"tab__container\" data-mce-fragment=\"1\"\u003e\n\n\u003cdiv class=\"pro__tab_label tab-pane fade show active\" id=\"nav-about\" role=\"tabpanel\" data-mce-fragment=\"1\"\u003e\n\n\u003cdiv class=\"description__attribute\" data-mce-fragment=\"1\"\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003eMANJAL MAGIMAI - பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும் மூங்கில் (பெரும்புல் வகை), விழுதுகளாக வெளியினை நிரப்பும் ஆலமரம் என்பவையே தொன்மையும் பண்பாடும் என்பது நமக்கு இயற்கை உணர்த்தும் பாடல்கள். 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது' என்ற வாழ்த்து மரவு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள்.\u003c\/p\u003e\n\n\n\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165506232571,"sku":"","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/e9587573fd4a96bca08c07bb0fd728a1.jpg?v=1705295770"},{"product_id":"mayirdhan-prachanaiya-katturai","title":"மயிர்தான் பிரச்சினையா? | MAYIRDHAN PRACHANAIYA?","description":"மயிர்தன் பிரச்சனையா? - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eநம் கல்விமுறையில் நிலவும் நடைமுறைப் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதிய கட்டுரைகள் இவை. கல்வி இன்று சேவையாக இல்லை; தொழிலாக இருக்கிறது. கல்வி பற்றிய புனித பிம்பங்கள் உதிர்ந்துவிட்டன. இச்சூழலில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை வெளியுலகப் பார்வைக்கு வைக்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. மாணவர்களை நோக்கியதாகப் பாடத்திட்டம், கற்பித்தல் முறை, ஆசிரிய அணுகுமுறை, அரசுத் திட்டங்கள் அனைத்தும் இருக்க வேண்டும் என்ற பார்வையை அடிப்படையாகக் கொண்டு இவை வெளியானபோது பல்வேறு எதிர்வினைகளைப் பெற்றவை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165507576059,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/fef5f2c67bf7c571d4d04f87043bcbff.jpg?v=1705725895"},{"product_id":"moga-perumayakku","title":"மோகப் பெருமயக்கு | MOGA PERUMAYAKKU","description":"மோக பெருமயாக்கு -\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e தி. ஜானகிராமனைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் சுகுமாரன் எழுதிய கட்டுரைகள், குறிப்புகளின் தொகுப்பு 'மோகப் பெருமயக்கு'. எழுத்தாளர் ஓர் மீதான மாறாப் பற்றையும் அவரது எழுத்துக்களில் உணர்ந்த கலை நுட்பத்தையும் இந்த நூல் கொண்டுள்ளது.\u003c\/p\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003eநவீனத் தமிழின் எழுத்து மேதைகளில் ஒருவரான தி. ஜானகிராமன் உலகில் வெளியாகும் இந்த நூல், இலக்கிய வாசகர் தனது விருப்பத்துக்குரிய எழுத்தாளருக்குச் செலுத்தும் நன்றிக்கடன். பின் தலைமுறை இலக்கியவாதி தனது முன்னோடிக்குப் படைக்கும் கைம்மாறு.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165507805435,"sku":"","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/ddccf8ab399319cf3176b865705b9cdd.jpg?v=1705389148"},{"product_id":"mogaththirai","title":"மோகத்திரை | MOGATHTHIRAI","description":"MOGATHTHIRAI - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஉமா வரதராஜனுக்கு சினிமா 'மனக்கடலின் உள் நதி நீரோட்டம்'. வாழ்க்கையின் இனிய தருணங்களிலும் துயர நிமிடங்களிலும் பிணைந்து நின்ற ஒன்று. சினிமா தந்த அனுபவங்களே அதைப் பற்றிய ரசனையையும் அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களே அதைப் பற்றிய நுட்பங்களையும் அதன் மூலம் வசப்படுத்திக்கொண்ட பட்டறிவே விமர்சனங்களையும் அவருக்கு வழங்கியிருக்கிறது. சொந்த அனுபவங்களின் வலுவில் மட்டுமே உமா வரதராஜன் தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரது திரையெழுத்தின் தனித்துவம் இது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165507870971,"sku":"","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/741b703c7dc6c9373ba69c4a6f116c61.jpg?v=1705389062"},{"product_id":"mun-alakkum-sol","title":"மண் அளக்கும் சொல் | MUN ALAKKUM SOL","description":"MUN ALAKKUM SOL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்நூல் தாவரங்களைப் பேசும் கட்டுரை நூல் என்ற லௌகீக நிர்ப்பந்தங்களுக்காகப் புத்தக விவரம் தரப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் தாவரங்களை நிமிர்த்தமாகக் கொண்டு . மனிதர்களின் மெய்யுரைத்த நூல். மண்தான் தாவரங்களையும் வளர்க்கிறது, மனிதர்களையும் புரக்கிறது. சில கூடுதல் அறிவுடன் மனிதன் இடம்பெயரும் தாவரம்; அவ்வளவுதான்.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆசிரியர் கந்தராஜா புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் உடல் புரண்டாலும் தமிழ் மண்ணை மறக்கவில்லை. 'மண் அளக்கும் சொல்' நூலின் ஒவ்வொரு சொல்லிலும் தொடரிலும் அவரது நினைவு மணக்கிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165508559099,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/199d1dab07900b64ea6976d5276e5627.jpg?v=1705388514"},{"product_id":"naal-malargal","title":"நாள் மலர்கள்","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165509083387,"sku":"","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/naal-malarkal-10022823-550x550h.jpg?v=1708676590"},{"product_id":"naan-kanda-ezhutthalargal","title":"நான் கண்ட எழுத்தாளர்கள் | NAAN KANDA EZHUTTHALARGAL","description":"நான் கண்ட எழுத்துகள் -\n \u003cp data-mce-fragment=\"1\"\u003e-புதுமைப்பித்தன், வ.ரா., தி.ஜ.ர., டி.எஸ். சொக்கலிங்கம் உள்ளிட்ட நவீன எழுத்தாளர்கள், டி.கே.சி., கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா, வெ.ப. சுப்பிரமணிய முதலியார் போன்ற பழந்தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளைப் பற்றி கு. அழகிரிசாமி எழுதிய நினைவுரைகள் இந்த நூல். இசைக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம், பதிப்பாளர் சக்தி\u003c\/p\u003e\n\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003eவை. கோவிந்தன், மஞ்சேரி ஈஸ்வரன், தொ.மு.சி. ரகுநாதன், துறைவன், ர.பா.மு. கனி ஆகிய எழுத்தாளர்கள் பற்றிய நினைவுக் குறிப்புகளும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003eஎழுத்தாளர்களின் இயல்புகள், தோற்றம், சாதனைகள் ஆகியவற்றைப் பற்றிய தன் அனுபவங்களைப் பகிரும் பாங்கில் அமைந்துள்ள நினைவுக்குறிப்புகள் இவை. தவிர்க்க விரும்பினாலும் தன்னையும் மீறிச் சில விமர்சனங்களும் இயல்பாகப் புகுந்துவிட்டன என்கிறார் கு. அழகிரிசாமி.\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e அனுபவம், நினைவு, அறிமுகம் ஆகியவற்றோடு விமர்சனமும் இழையோட சுவாரஸ்யமான மொழியில் அமைந்த நூல் இது.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165509116155,"sku":"","price":275.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/9760ed703878999ad823d57b5a3de9a1.jpg?v=1705676196"},{"product_id":"naan-yen-indhu-pen-alla","title":"நான் ஏன் இந்துப் பெண் அல்ல | NAAN YEN HINDU PEN ALLA","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eNAAN YEN HINDU PEN ALLA - சாதி, பாலினம் ஆகியவை சார்ந்து இந்துத்துவத்தின் கண்ணோட்டத்திலும் அணுகுமுறையிலும் உள்ள பிரச்சினைகளின் வேர்கள் இந்து மதத்தில் உள்ளது\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 'இந்தியாவில் சாதி' என்னும் நூலை அம்பேத்கர் எழுதும்போது இந்துத்துவம் பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கவில்லை.\u003c\/span\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eசாதியத்தின் வேர்கள் இந்து மதத்தில் ஆழமாக வேரோடியுள்ளதையும் அதன் கிளைகள்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eசமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல்வேறு வடிவங்களில் பரவியிருப்பதையும்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅம்பேத்கர் உரிய ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறார். பாலினம் சார்ந்தும் அதே\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eவிமர்சனத்தை முன்வைக்க முடியும் என இந்த நூலில் வந்தனா சொனால்கர் வாதிடுகிறார்.\u003c\/span\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்து மதம் சாதியத்தில் மட்டுமின்றி ஆணாதிக்கத்திலும் ஊறியது என்று கூறும் வந்தனா,\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்து மதம் சார்ந்த நூல்களையும் அதன் சமூக மரபுகளையும் பழக்க வழக்கங்களையும்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆதாரமாகக் கொண்டு தன் பார்வையை முன்வைக்கிறார். சாதிய அடுக்கிலும்\u003c\/span\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபொருளாதார நிலையிலும் உயர் நிலையில் உள்ள பின்னணியைச் சார்ந்த வந்தனா, தன்னுடைய சொந்த வாழ்க்கையை முன் வைத்து இந்த விசாரணையைத் தொடங்கினார்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eதொடங்குகிறார். பக்தி, பண்பாடு ஆகியவற்றின் பெயரால் ஆணாதிக்கம் இங்கே நுட்பமாகவும் ஆழமாகவும் நிலைபெற்றிருப்பதை நிறுவுகிறது.\u003c\/span\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபல்வேறு அடுக்குகள் கொண்ட இந்த நூல் இந்து மதம் குறித்த கூர்மையானதும் காத்திரமானதுமான விமர்சனத்தை முன்வைத்துச் சமகால அரசியல் உரையாடலுக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇன்றைய “உயர்” சாதியைச் சேர்ந்த பெண்ணியவாதியாக இருப்பது என்ன என்பது குறித்த தன்வரலாற்றுத் தன்மை கொண்ட துணிச்சலான விசாரணை\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165509345531,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/8b780b2dcbde4aaa00da256affc204e9.jpg?v=1705295374"},{"product_id":"nagalisai-kalaingan","title":"நகலிசைக் கலைஞன் | NAGALISAI KALAINGAN","description":"NAGALISAI KALAINGAN - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅறிந்தோ அறியாமலோ திரை இசைதான் தமிழர்களின் குருதிநாளில் ஓடும். சமகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் எல்லா விமரிசைகளுக்கும் சினிமாப் பாடல்களே வடிகால். அந்த வடிகாலில் இசைப் பெருக்கைத் திறந்துவிடும் இசை அமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்கள், இசைக் கலைஞர்கள் என்று திரையுலகில் செயல்படுபவர்கள் அநேகம். அவர்களைப் பற்றி திரை இசை ரசிகனுக்கு ஓரளவாவது தெரியும். அவர்கள் உலகின் தோற்றங்கள் தெரியும். அவர்களை அடியொற்றி அதே தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் கலைத்திறனுடனும் செயலாற்றும் இணை உலகமும் இருக்கிறது. இசைக்குழுவினரின் உலகம். நகலிசைக் கலைஞர்களின் உலகம். அறிந்தும் அறியப்படாத அந்த நகல் உலகின் இயல்பைச் சொல் கிறது இந்நூல். வெறும் தகவல் திரட்டாகவோ ஆவணத் தொகுப் பாகவோ அல்லாமல் சிரிப்பும் கண்ணீரும் வலியும் கொண்டாட்டமும் நிறைந்த உயிரோட்டமான நடையில் சொல்கிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165509443835,"sku":"","price":175.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/5c1ad66b9fbe66ab18a731316935b651.jpg?v=1705484101"},{"product_id":"neduvazhi-vilakkugal","title":"நெடுவழி விளக்குகள் தலித் ஆளுமைகளும் போராட்டங்களும் | NEDUVAZHI VILAKKUGAL","description":"நெடுவாழி விளக்குகள் -\n\u003cp data-mce-fragment=\"1\"\u003e - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eகவனிக்காமல் விடப்பட்ட தலித் பங்களிப்பை விரிவான தகவல்களோடு ஆழமான ஆய்வு நோக்கில் காலப் பொருத்தப்பாட்டுடனும் முன்னிருத்துகிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபொதுச் சமூகம் மறந்துவிட்ட அல்லது நினைவுகூர மறுக்கிற தலித் ஆளுமைகளின் போராட்டங்கள், கல்விப் பணிகள், செயற்பாடுகளின் விரிவான மதிப்பீடுகளை இந்நூல் கொண்டுள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதலித் கல்வி வரலாறு தொடர்பில் காந்தியின் அரிசன சேவா சங்கம் மதுரைப் பகுதியில் மேற்கொண்ட பணிகளையும், தலித்துகளின் கல்வி வரலாற்றையும் பற்றிய இரு கட்டுரைகள் புதிய செய்திகளை அறியத் தருகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதமிழக தலித் அரசியல் கறுப்பின அரசியல் தளத்திலிருந்து பெற்றுக்கொண்ட போராட்ட வடிவத்தை முன்னெடுத்துச் செயல்பட்ட இயக்கம் பற்றிய சித்திரம், கோலார் தங்கவயலின் வைணவத் தொடர், கல்விப் பணிகள், சித்தார்த்தா புத்தகச் சாலை, பதிப்பகப் பணிகள் எனக் காத்திரமான ஆதாரங்களுடன் இந்நூலின் பக்கங்கள் விரிகின்றன.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003e'எழுதாக் கிளவி: வழிமறக்கும் வரலாற்று அனுபவங்கள்' நூலைத் தொடர்ந்து வெளிவரும் 'நெடுவழி விளக்குகள்' தலித் வரலாற்றில் சுடரும் புதிய வெளிச்சம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165510099195,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/7467d5638b5002e834ac3e3381c4378f.jpg?v=1705675376"},{"product_id":"neerattum-aarattum","title":"நீராட்டும் ஆறாட்டும் | NEERATTUM AARATTUM","description":"NEERATTUM AARATTUM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003e'மரபும் புதுமையும்', 'மஞ்சள் மகிமை' ஆகிய இரு சிறு நூல்களின் தொகுப்பு இந்நூல்.\u003c\/span\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் தொடர்ச்சி. 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது' என்ற வாழ்த்து மரபு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள். பண்பாட்டு மரபைப் பேணும் அதேவேளையில் நலங்குன்றப் புதுமைகளுக்கு இசைவான தகவமைப்பையும் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன.\u003c\/span\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eநிறுவனமயமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கிக் கெட்டிதட்டிப்போன 'மரபு'களுக்கு மாறாக, நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பைக் காட்டுவன தொ.ப.வின் ஆய்வுகள்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e-பா. மதிவாணன்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165510131963,"sku":"","price":75.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/71ab6ac7edf37d0950772e2e169003f1.jpg?v=1705483829"},{"product_id":"negilum-varaiyaraigal","title":"நெகிழும் வரையறைகள் விரியும் எல்லைகள் | NEGILUM VARAIYARAIGAL VIRIYUM ELLAIGAL","description":"NEGILUM VARAIYARAIGAL VIRIYUM ELLAIGAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eசமகாலத் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு சலனங்களைக் கூர்மையான பார்வையோடு அணுகும் கட்டுரைகள் இவை. நூல்கள், படைப்பாளிகள், இலக்கியப் போக்குகள் ஆகியவற்றினூடே பயணிக்கும் அரவிந்தனின் அணுகுமுறை படைப்பின் ஆதார சுருதியையும் படைப்பாளிகளின் ஜீவனையும் ஸ்பரிசிக்க முயல்கிறது. லா.ச.ரா., அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, இமையம், ஆ. இரா. வேங்கடாசலபதி உள்ளிட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பற்றிய விரிவான அலசல்கள் இந்நூலில் உள்ளன. 1990களுக்குப் பிந்தைய நவீன இலக்கியப் போக்குகளின் முக்கியக் கூறுகள் அவற்றின் பின்புலத்தோடும் தாக்கங்களோடும் அணுகும் கட்டுரைகள் தொகுப்பில் உள்ளன.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165510263035,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/57ec130d15d42cf917a1ba492dad141c.jpg?v=1705483752"}],"url":"https:\/\/www.jayambookcentre.com\/ta\/collections\/katturaigal.oembed?page=18","provider":"Jayam Book Centre","version":"1.0","type":"link"}