{"title":"தமிழ் சேகரிப்புகள்","description":"","products":[{"product_id":"aadhmanaam-kavithaikal","title":"ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள் | AATHMANAM THERNTHEDUTHA KAVITHAIGAL","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e- சுகுமாரன்\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபொதுவாவே, ஆத்மாநாம் கவிதைகள் தர்க்கம், அதர்க்கம் அப்படிங்கற இரண்டு எல்லைகளுக்குள்ள போய்ப்போய் வந்துக்கிட்டே இருக்கு. ஆனா, தர்க்கத்தையும் அதர்க்கத்தையும் பிரிக்கிற கோடு அவ்வளவு துல்லியமானதாக இல்லை. அதனால்தான் வகைப்படுத்தறதும் சிரமம்.\u003c\/span\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e- யுவன் சந்திரசேகர்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165475332347,"sku":"","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/61090269bf1a960a2fa8121317dd17ac.jpg?v=1705049475"},{"product_id":"aadhma-sagotharan","title":"ஆத்ம சகோதரன் | AATHMA SAGOTHARAN","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eகிராமத்து முதியவர் ஒருவர் வாழ்க்கையின் இரகசியங்களைப் பற்றி எங்களுக்குத் தீட்சியளித்தார். எங்களுக்குச் சொன்ன மிகப்பெரிய இரகசியம் என்னவென்றால், நிகழ்வுகள்தான் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன, மனிதன் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதாகும். ஒரு மனிதனுக்கு வரும் திடீர் சோதனை அதற்கு முன் அவன் போன்ற மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். மனிதனின் சாத்தியக் கூறுகள் எல்லாம் ஏற்கனவே அனுபவிக்கப்பட்டவை. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், நமக்கு ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. இருப்பினும், நாம் அனுபவிப்பது நமக்குப் புதிதாகத் தோன்றும், ஏனெனில், மனிதன் ஒவ்வொருவனும் தனிப்பட்டவன் - ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு மரமும் தனிப்பட்டதாக இருப்பதைப் போல!\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165475365115,"sku":"","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/8c0dc53bd60180f6552512d86e06e1f3.jpg?v=1705049417"},{"product_id":"aagayath-thamarai","title":"ஆகாயத் தாமரை | AAGAYA THAAMARAI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் 'ஆகாயத் தாமரை'யாக விரிகின்றன. இயல்பான சில நிகழ்வுகளும் வியப்புக்குரிய தற்செயல் நிகழ்வுகளும் இணைந்து ரகுநாதனின் வாழ்க்கையை அலைக்கழிக்கின்றன. ரகுநாதனின் வாழ்வின் ஓரிரு நாட்கள் அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிப்பதுடன், மொத்த வாழ்க்கையின் வகைமாதிரியாகவும் இருக்கின்றன. அவனைப் போன்ற நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாட வகைமாதிரியாகவும் அவர்களது வாழ்க்கைப் போக்கினை உணர்த்தும் குறியீடாகவும் உள்ளன. புறக் காட்சிகள், மன உணர்வுகள், நடத்தைகள் ஆகியவற்றின் நுணுக்கமான சித்தரிப்புகளினூடே அசோகமித்திரன், ரகுநாதனின் கதையைச் சொல்கிறார். அவனுடைய செயல்கள், உணர்வுகள், அவனைப் பாதிக்கும் நிகழ்வுகள், மனிதர்கள், அவன் சிக்கிக்கொள்ளும் நெருக்கடிகளின் தன்மைகள், அவனுக்குக் கிடைக்கும் எதிர்பாராத உதவிகள், அவற்றை அவன் எதிர்கொள்ளும் விதங்களை நுணுக்கமாகச் சித்தரிக்கிறான். இந்தச் சித்தரிப்புகளில் குடும்ப உறவுகள், சமூக உறவுகள், பொருளாதாரப் படிநிலைகள், ஆண் - பெண் உறவுகள், அலுவலக நடைமுறைகள் எனப் பல அம்சங்கள் துலங்குகின்றன. படித்துக்கொண்டிருக்கும்போது தாளும் எழுத்துக்களும் மறைந்து புனைவின் காட்சிகள் மனத் திரையில் புலனாக, காதருகே ஒரு குரல் மிருதுவாகப் பேசுவதுபோன்ற உணர்வைத் தரும் அசோகமித்திரனின் சித்தரிப்பு ரசவாதம் இந்த நாவலிலும் கச்சிதமாக அமைந்துள்ளது. ஆகாயத் தாமரை என்னும் கற்பனையை மானுடக் கனவுகளின் குறியீடாக உருவகிக்கும் இந்த நாவல், இந்தக் குறியீட்டின் பின்புலத்தில் வாழ்வின் யதார்த்தத்தைக் காட்டுகிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165475561723,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/5ebe427a09ac4307ba00322f99d812b0.jpg?v=1705214293"},{"product_id":"aalantop-patchi","title":"ஆளண்டாப் பட்சி | AALANTOP PATCHI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eபெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றுமையில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்ட விடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளந்தப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165475660027,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/395aa6d6727a702f8ee29d38f0f85cd4.jpg?v=1705209574"},{"product_id":"aalatra-paalam","title":"ஆலட்ரா பாலம்","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165475692795,"sku":"","price":295.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/81bnoMiPn-L._SY425.jpg?v=1708438340"},{"product_id":"aalavaayan","title":"ஆலவாயன் | AALAVAYAN","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003e'மாதொருபாகன்' நாவலின் இரு கோணங்களை விரித்து 'அர்த்தநாரி', 'ஆலவாயன்' ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளது. ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு நாவல் 'ஆலவாயன்.' உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் அதைக் கடக்க மனிதர்கள் படும் பாடுகளையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது இந்நாவல்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165475758331,"sku":"","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/4b8168cf310bb49390ee2adff9d0932c.jpg?v=1705209885"},{"product_id":"aalo-aalo","title":"ஆலோ ஆலோ | AALO AALO","description":"AALO AALO - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபோர், புலம்பெயர்வு, மேற்குலக வாழ்வு போன்ற சமகால நிகழ்வுகளின் தாக்கங்களினால் பரிய சமூகம், பண்பாட்டு, பொருளாதார மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் புதிய பிரதியாக ஜெயகரனின் படைப்புகள் முக்கியமானவை. புதிய கதைக் களமும் கதை மாந்தர்களும் எளிய மொழி நடையும் தமிழ் வாசகர்களுக்கு மாற்று வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. அரசியல் எல்லைகள் தாண்டிப் புகலிடத்தின் புது அனுபவங்களுக்கூடாகத் தமிழ் இலக்கிய வெளிப்பாட்டில் நிலவும் எல்லைகளைத் தாண்டும் எழுத்து இது. இக்கதைகள் தமிழின் முக்கியமான படைப்புகளாகக் கொள்ளத்தக்கவையாகும்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165475823867,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/7d99de34a74845ed4ce05d981cc27b30.jpg?v=1705735539"},{"product_id":"aanava-kolaikalin-kaalam","title":"ஆணவக் கொலைகளின் காலம் | AANAVA KOLAIKALIN KAALAM","description":"AANAVA KOLAIKALIN KAALAM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅதிகரிக்கும் ஆணவக் கொலைகளுக்கு அரசியல் ஆதரவு கிடைத்திருக்கும் இன்றைய நிலையில் அவற்றைப் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்கின்றன. சமூக உளவியலுக்கும் இக்கொலைகளுக்கும் இடையேயான உறவினையும் தமிழகம் ஈட்டியிருக்கும் சமூக நீதிப் பெயருக்கு முரணாக இக்கொலைகள் நீடிக்கும் அரசியல் மௌனத்திற்கான காரணங்களையும் இக்கட்டுரைகள் விவாதிக்கின்றன. இன்று நமது அறிவுச்சூழலில் மேலோங்கியிருக்கும் - 'குற்றச்சாட்டு x தீர்வு' என முரண்பட்டு இயங்கும் விவாதமற்ற போக்குகளிலிருந்து விலகி கூர்மையான கேள்விகளையும் காரணங்களையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. கண்டனம், ஆவேசம், அடையாளம்சார் முழக்கம் ஆகிய அரசியல்வாதிகளின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளைக் கடந்து இக்கொலைகளை விரிந்த பின்புலத்தில் வைத்து களநிலவரத்தையும் அறிவுலகையும் புரிந்துகொள்வதன் அத்தியாவசியத்தை வலியுறுத்துகிறது. இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட காலங்களில் பரவலான கவனிப்பையும் விவாதத்தையும் பெற்ற கட்டுரைகளோடு சினிமா, புனைகதை, முகநூல் பதிவு, உண்மையறியும் அறிக்கை, நீதிமன்ற வழிகாட்டுதல் குறிப்பு ஆகியவற்றைத் தொட்டுப் புதிதாக எழுதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. ஆணவக் கொலை தொடர்பான விவாதத்திற்கு மட்டுமல்ல அதற்கான ஆவணரீதியான கையளிப்பாகவும் இத்தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது-.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165476020475,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/b6b4dfe5db57f277508c74bfed273edf.jpg?v=1705735440"},{"product_id":"aanava-kolai-samikalum-perumitha","title":"ஆவணக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் | AANAVA KOLAI SAMIKALUM PERUMITHA KOLAI AMMANGALUM","description":"ஆணவ கொலை சாமிகளும் பெருமித கொலை அம்மங்களும் -\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eஅகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்ற காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக் குடும்பப் பெருமிதமும் கொலைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. இப்படிப்பட்ட இறப்புகளுக்குப் பின் தெய்வமாக்கப்பட்ட பதினான்கு பேரின் கதைகள்தான் இந்த நூல்; இதைப் புலனாய்வு அறிக்கை என்றும் கூறலாம். கதைகளை மட்டும் சொல்லாமல் உள்ளார் குற்றப் பின்னணி, தெய்வமாக்கப்பட்ட பின் உருவான வழிபாட்டு முறை என எல்லாவற்றையும் நூலாசிரியர் ஆழமாகப் பதிவுசெய்துள்ளார்.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e\u003cb data-mce-fragment=\"1\"\u003e\u003cstrong data-mce-fragment=\"1\"\u003e- அ.கா. பெருமாள்\u003c\/strong\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165476053243,"sku":"","price":130.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a1dfb93e5fd6cc9f7f6499f93e035697.jpg?v=1705735331"},{"product_id":"aasaathi","title":"ஆசாத்தி","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165476446459,"sku":"","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/81AYRzwksCL._SY425.jpg?v=1708438380"},{"product_id":"aash-adichuvatil","title":"ஆஷ் அடிச்சுவட்டில் | AASH ADICHUVATIL","description":"AASH ADICHUVATIL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாகச் சமூக அசைவியக்கத்தைப் புலப்படுத்தும் நவீன நடைமுறைகள் இவை. முற்றிலும் புதிய செய்திகள், அப்படியே தெரிந்த தகவல்களைச் சுட்ட நேர்ந்தாலும் அவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுபவை. தீரா ஆய்வின் நுட்பம், வாளினும் கூறிய சொற்கள், மிகையோ வெற்றுச்சொல்லோ பயிலாத் தொடர்கள், இவற்றுக்கும் மேலாக உலகளாவிய பார்வை போன்ற ஆ. இரா. வேங்கடாசலபதியின் தனித்துவங்கள் பல மிளிரும் சித்திரங்கள் இந்நூல். இந்த ஆளுமைகளைப் பற்றி முன்பின் அறியாதவர்களை இந்நூல் ஆச்சரியப்படுத்தும்; அறிந்தவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தும். எது மிகையில் சுவாரசியமும் புதிய தகவலும் போட்டிப் போட்டுத் தோன்றுகின்றன.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165476511995,"sku":"","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/36c9158cafc4784e6f16b89f9d022940.jpg?v=1705735135"},{"product_id":"aayurvedhaththin-adippadaikal","title":"ஆயுர்வேதத்தின் அடிப்படைகள் | AAYURVEDHATHTHIN ADIPPADAIKAL","description":"AAYURVEDHATHTHIN ADIPPADAIKAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்திய மக்கள் தெரிந்தோ தினசரி பேசும் போது ஆயுர்வேதச்\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eசொற்களைப் பயன்படுத்துகின்றனர். நாட்டின் உட்பகுதியில் ஒரு மூலையில் வாழும்\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபடிக்காதவர் கூட தயிர் சாப்பிட்டால் நெஞ்சில் கபம் கட்டும் என்கிறார். பலர் தினமும்\u003c\/span\u003e \u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003cspan data-mce-fragment=\"1\"\u003eவேர்களையும் பச்சிலைகளையும் பயன் படுத்துகிறார்கள். வெட்டிவேர் உடலின்\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003e'சூட்டை'த் தணிக்கும்; கோடைகாலத்தில் சற்று இதம் அளிக்கும் என்கிறார்கள்.\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇந்தியர்களைப் பொறுத்தமட்டில் ஆயுர்வேதம் இரத்தத்தில் ஊற வைக்கிறது. பல\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eநூற்றாண்டுகளாக வாழ்வில் இணைந்து விட்டது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165477757179,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/ae4ee7bff2f9d59c6a8663790a3acf85.jpg?v=1705735032"},{"product_id":"aazhi-sool-ulagu-k","title":"ஆழி சூழ் உலகு | AAZHI SOOL ULAGU","description":"AAZHI SOOL ULAGU - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபரதவர்கள் தமிழின் தொன்மையான குடியினர். செவ்விலக்கியங்களில் எண்ணற்ற குறிப்புகள் இருப்பினும் இவர்களைக் குறித்து நவீன இலக்கியத்தில் குறைவான ஆக்கங்களே காணப்படுகின்றன. அவையும் கரையினின்று கடலைப் பார்த்துத் திகைத்து நிற்பனவாகவே உள்ளன. இக்குறையினைத் தீர்க்கும் முகமாக ஆழிப் பெருங்கடலை, அதை நம்பிப் பிழைக்கும் மனிதர்களை, அவர்களின் அல்லாட்டமான வாழ்க்கைப்பாடுகளை, குல நம்பிக்கைகளை, வரலாற்றுத் தொன்மங்களை அதன் கரைக்கும் உப்புச் சுவையோடு சொற்களை எழுப்பிக் காட்டியிருக்கும் பெரும் புனைவே இந்நாவல். ஒரு சிறிய மீனவ கிராமத்தின் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான வரலாற்றை, பலநூறு முகங்களின் வழியாக, மூன்று தலைமுறைகளின் வளர்சிதை மாற்றங்களுடன் விரித்துக் கூறும் இந்நாவலின் ஆதாரமான விசையாகக் காலமும் மரணமும் பின்னிருந்து இயங்குகிறது. எப்படிப் பார்த்தாலும் வாழ்வின் இறுதியாக எஞ்சப் போகும் கழிவிரக்கத்தினின்றும் மனிதன் தப்பிப்பிழைக்க வழி அன்பும் தியாகமும்தான் என்பதே இதன் உள்ளுறையாகத் திரள்கிறது. ஓயாத அலைகள் ஒன்றுகூடி நிறையும் கடல்போல, இச்சைகளால் அலைக்கழியும் தனி மனிதர்களைச் சித்தரிப்பதன் வழியாக வாழ்வெனும் பெரும் நாடகத்தை உருவகித்துக் காட்டிய வகையில் தமிழின் சாதனைகளில் ஒன்றாக இந்நாவல் அமைகிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165477789947,"sku":"","price":725.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/c668e0d656c3cbb0fbd9cd31ffe552af.jpg?v=1705504559"},{"product_id":"abitha","title":"அபிதா | ABITHA","description":"ABITHA - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eதன் காலத்துப் படைப்புமொழியை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற படைப்பாளிகளில் லா.ச.ராமாமிர்தம் முக்கியமானவர். 'அபிதா' தன் காலத்து வாசகர்களின் மனதில் அழியக் காவியமாக வீற்றிருக்கும் ஒரு படைப்பு. காதலின் துயரத்தையும் அது உருவாக்கும் மனப்பிறழ்வையும் இவ்வளவு அற்புதமாகச் சொல்லிவிட முடியுமா? கவித்துவம் ததும்பும் தனித்துவமான அவரது படைப்புமொழி உரைநடைக்குக் காப்பியத் தன்மையை வழங்குகிறது. வாழ்வுவரமா? சாபமா? வரம் எனில் யாருக்கு வரம்? சாபமெனில் யாருக்குச் சாபம்?\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165477855483,"sku":"","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/25b691b4ab5a010d4bb53df1cb6ff804.jpg?v=1705504286"},{"product_id":"adaikkum-dhazh","title":"அடைக்கும் தாழ் | ADAIKKUM THAZH","description":"அடைக்கும் தாழ் -\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eபெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே இயல்பாகத் தோன்றும் ஈர்ப்பு உயிர்களின் ஆதாரமான உணர்வு. வாழ்வின் அமுதம். சாதியும் மதமும் இந்த அமுதத்தை விஷமாக்கி வருகின்றன. மதங்களுக்கிடையிலான விரோதம் மத எல்லைகளைக் கடந்த காதலையும் தீண்டி அதனைக் கருகச் செய்கிறது. மதம் தாண்டிய காதலை இறைமைக்கு எதிராகக் காணும் பிற்போக்குத்தனமும் அத்தகைய காதலைப் போர் வியூகமாகக் காணும் மதவாதமும் சந்திக்கும் புள்ளியில் வெடித்துச் சிதறுகின்றன இளம் மனங்களின் களங்கமற்ற காதல்கள்.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eஅன்பைத் தாழிட்டு அடைக்க முடியாது என்கிறார் வள்ளுவர். பேதங்களில் ஊறிய மானுட மனம் சாதி, மத, வர்க்க எல்லைகளைக் கடந்த காதல்களுக்கு அந்தப் பெருமையை வழங்க மறுக்கிறது. காதலும் அரசியலாக மாறிச் சந்தி சிரிக்கும் காலகட்டத்தின் காதல்களை அடையாளம் காட்டுகிறது சல்மாவின் நாவல்.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165477953787,"sku":"","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/8b816b9fd7b1132e5e7ee06178de86e3.jpg?v=1705504211"},{"product_id":"adimai-aavanangal","title":"அடிமை ஆவணங்கள் | ADIMAI AAVANANGAL","description":"ADIMAI AAVANANGAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eதமிழகத்தில் அடிமைமுறை பற்றிய நூல்கள் மிகக் குறைவு. ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களின் 'தமிழகத்தில் அடிமைமுறை' நூல் குறிப்பிட்டது. அந்த வரிசையில் வருவது அ.கா. பெருமாளின் இந்த நூல். இதில் இருப்பவை அடிமைமுறை தொடர்பான மூல ஆவணங்கள். நாட்டார் வழக்காறுகளின் வழியும் பண்பாட்டு வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசிவரும் அ.கா. பெருமாள், இந்த நூலில் அதைப் பெருமளவில் பாவித்திருக்கிறார். இந்நூலின் முன்னுரை அரிய பல செய்திகளைக் கூறுவது. தென்குமரியில் உள்ள சில சாதிகளைப் பற்றிய அரிய செய்திகளைக் கதைப்பாடல்கள் வழி மீட்டெடுத்திருக்கிறார் பெருமாள். கடின உழைப்பு நூலில் தெரிகிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165478019323,"sku":"","price":160.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/2403d1d660cf3a8c3317946aeef40392.jpg?v=1705734977"},{"product_id":"adiyum-mudiyum","title":"அடியும் முடியும் | ADIYUM MUDIYUM","description":"ADIYUM MUDIYUM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇறைவனின் அடியும் முடியும் காண இயலாதென்பது நம்பிக்கை. இறைவன் படைத்த எதனையும் எல்லை காண இயலாதென்பது உட்பொருள். இடையறாமல் முயன்றால் எப் பொருளாயினும் எல்லை காணலாம் என்பது ஆராய்ச்சி. 'காலத்தொடு கற்பனை கடந்த' கடவுளை வாழ்த்தும்போதும் காலத்தின் சாயல் படியாத கற்பனை இல்லை. கடவுளும் காலத்தைக் கடக்கவில்லை. ஆதிகவி வான்மீகி முதல் அண்மைக்காலப் புனைகதையாசிரியர் வரை அகலிகை கதையைத் தத்தம் காலத்தில் நின்று அணுகியுள்ளனர். இக்கதைகளினூடே மாறிவரும் கற்புநெறியைக் காணமுடிகிறது. கண்ணகி கதையின் வித்துகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. அவை சிலப்பதிகாரமாய், நாட்டுப்புறக் கதைப்பாடலாய்ப் பின்னர் விரிந்தன. சிலப்பதிகாரம் பற்றிய கண்ணோட்டம் காலந்தோறும் சூழல்தோறும் மாறிவருகிறது. இவற்றைக் கடந்து சிலப்பதிகாரச் செய்தியைக் காண வேண்டும். சுந்தரர் 'திருநாளைப் போவார்' எனக் காரணப்பெயர் மட்டுமே சுட்டுகிறார். நம்பியாண்டார் நம்பி சில வரலாற்றுக் குறிப்புகள் தருகிறார். சேக்கிழார் சேரிப் பின்புலத்தொடு கதையாக்குகிறார். கோபாலகிருஷ்ண பாரதியிடம் 'நந்தனார் சரித்திரக் கீர்த்தனை' சமய வரம்புக்குட்பட்டு வர்க்க முரண்பாட்டுக் கூறுகள் பொதிந்த நாடகமாகப் பரிணமிக்கிறது. இவ்வாறெல்லாம் கோட்பாட்டுக் கண்கொண்டு கைலாசபதி தமிழிலக்கியத்தில் காணும் சில கருத்து மாற்றங்களை இந்நூலில் அலசி ஆராய்ந்துள்ளார். அரைநூற்றாண்டுக்குப் பின்னும் ஆய்வுக் கூர்மை குன்றாத இக்கட்டுரைகள், கல்விப்புல வறட்டுத் தளத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு, தம் நடைநயத்தால் நம்மை வயப்படுத்துகின்றன. பா. மதிவாணன்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165479002363,"sku":"","price":325.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/6efdb3f49d82b93a5f81d8b1958b6920.jpg?v=1705504081"},{"product_id":"agathiyin-thuyaram","title":"அகத்தியன் துயரம்","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165479067899,"sku":"","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/61I1NRGzN7L._SY425.jpg?v=1708438430"},{"product_id":"agnar","title":"அஞர் | ANJAR","description":"அஞ்சார் - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபோரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப் பேசுவதை இன்றைய கவிஞனின் கடப்பாடு என்பேன். அஞர் போரின் வலியைக் கிளறி வாழ்வை நுகர்வதற்கான உரிமைக்காகப் போராட நம்மைத் தூண்டுகின்றது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165479100667,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/722b4d83eaeed5d10775d0bc565d0663.jpg?v=1705734892"},{"product_id":"agrakarathil-periyar","title":"அக்கிரகாரத்தில் பெரியார் | AGRAKARATHIL PERIYAR","description":"அக்ரகாரத்தில் பெரியார் - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eபி.ஏ. கிருஷ்ணனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பில், புத்தகங்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளும் மதிப்புரைகளும் அடங்கியுள்ளன. இவை மர்மக் கதைகள், சமஸ்கிருதக் கவிதை, மேற்கத்தியக் கலை, வாழ்க்கை வரலாறு, மேற்கத்திய நாவல், கிளீக்கெட், மக்கள் அறிவியல், சமூகவியல், தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் எனப் பரந்து விரிந்த தளத்தினை உள்ளடக்கியுள்ளன. தமிழ்ச் செவ்வியல் மரபில் ஆசிரியருக்கான ஆய்வும் நவீன அறிவுத் துறைகள் சார்ந்த புரிதலும் கட்டுரைகளுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றன. தெளிவான, சரளமான நடையில், நேரடியாகப் பேசுவதுபோல் அமைந்துள்ள இக்கட்டுரைகள், வாசகரின் அனுபவத்தை மேலும் விரிவடையச் செய்யும் ஆழமான பார்வை கொண்டவை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165479166203,"sku":"","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/3134f8e8b09faf2dd94099906df8ed70.jpg?v=1705734825"},{"product_id":"ajnabi","title":"அஜ்னபி | AJNABI","description":"AJNABI - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eமதவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் இஸ்லாமியச் சமூகத்தில் எளிய மனிதர்கள். அவர்களுக்குப் பூனைகளை விரும்பும் தங்கைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு ஒரு பெண்ணை நிச்சயித்துவிட்டு ஐயாயிரம் மைல் கடந்து மகன் வருவானா என்று காத்திருக்கும் வாப்பாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் உரிய வயதில் கல்வி கற்க முடியாமல் குடும்பத்தைப் பிரிகிறார்கள். வீட்டில் நிகழ்கிற எந்த நிகழ்விலும் கலந்துகொள்ள முடியாமல் தனக்கென ஒரு சொந்த வீடு கட்ட அயல்தேசத்தில் உழைக்கிறார்கள். சகோதரியின் திருமணம் ஒளிநாடாவில் வரும். விரும்பும்போதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். நிச்சயித்த பெண்ணின் நிழற்படம் அஞ்சலி வரும். தனிமையில் அதனுடன் பேசிக்கொள்ளலாம். மரணமும் செய்தியாக வரும். தனியறையில் அழுதுகொள்ளலாம். அரபு நாடுகளில் பிழைக்கப்போகிற இஸ்லாமியச் சமூகம் சார்ந்த எளிய மனிதர்களின் உணர்வுபூர்வமான ஆவணம். சர்வதேசத் திரைப்படத்தின் கூறுகளோடு இது பொருந்திப் போவதற்கான காரணம் இதன் யதார்த்தம். அங்கதமும் நகைச்சுவையும் சேர்ந்து நுட்பமான அரசியல் பார்வையுடன் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூலைச் சமீபத்தில் தமிழில் நிகழ்ந்த முக்கியமான பதிவு என்று சொல்லலாம்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165479395579,"sku":"","price":375.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/ce493a16c5fb5c1c20754f588810fd38.jpg?v=1705504007"},{"product_id":"amavum-pattupurakkalum","title":"அம்மாவும் பட்டுப்புறாக்களும்","description":"AMAVUM PATTUPURAKKALUM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003e1856. அவத் ராஜ்ஜியத்தின் தலைநகரமான லக்னோ கிழக்கிந்திய கம்பெனியின் பேராசைக் கரங்களுக்கு இலக்காகிறது; நவாப் கல்கத்தாவில் கம்பெனியின் உயரதிகாரிகளைச் சந்திக்கக் கோரிக்கை மனுவோடு முகாமிட்டிருக்கிறார்; அவரின் தாயாரோ லண்டனில் விக்டோரியா மகாராணியின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறார்; இந்தச் சூழலில் நவாப்பின் இரண்டாம் மனைவியான, அரச குடும்பத்தில் பிறக்காத, அரசி என்ற அந்தஸ்து அளிக்கப்படாமல் காமக் கிழத்திகளில் ஒருத்தியாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் பேகம் அஸ்ரத் மகள் கம்பெனிப் படையின் அத்துமீறல்களை எதிர்கொண்டு தனது இளம்வயது மகனுக்கு முடிசூட்டி மக்கள் மனதில் நம்பிக்கையை ஊட்டி லக்னோவை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சி வென்றதா? லக்னோ காப்பாற்றப்பட்டதா? இந்தக் காலகட்டச் சம்பவங்களை, நவாப் குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவளும் அவரது கருவூலத்தின் பாதுகாவலாளியும் தாய் வழியில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவளும் போராளியுமான அமா என்ற இளம்பெண்ணின் வாழ்வனுபவங்களாக நாவல் விரிகிறது. போர்ச்சூழலின் வக்கிரமான புற அழிவுகளைப் பற்றிய விவரணைகள் ஒரு போர்க்களத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன; மனித உணர்வுகள், வாழ்க்கை மதிப்பீடுகள் இவற்றிற்குப் போர் விடுக்கும் சவாலும் நெருக்கடியும் அதை மனிதர்கள் எதிர்கொள்ளும் விதமும் காத்திரமான பாத்திரங்களின் மூலம் நாவலில் நுட்பமாக வெளிப்படுகிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165480673531,"sku":"","price":425.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/966370096f5ae4b31cacb293fe39fc53.jpg?v=1705734608"},{"product_id":"ambai-kathaigal","title":"அம்பை கதைகள் (1972 - 2017) | AMBAI KATHAIGAL","description":"AMBAI KATHAIGAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eநவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவரான அம்பை கடந்த அரைநூற்றாண்டு காலம் எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். அதுகாறும் மறுக்கப்பட்ட உலகின் புதிய குரல் அம்பையினுடையது. திரைச்சீலைகளுக்குப் பின்னும் நிலைக்கதவுகளை அடுத்தும் சமையற்கட்டுக்குள்ளும் புழுங்கித் தவித்தவர்களை வரவேற்பறைக்குக் கொண்டுவந்தவர் அம்பை. இந்தக் கதைகள் உறவுகளால், போராட்டங்களால், கசப்பால், தனிமைகளால், அபூர்வமான பரவசங்களால், விம்மல்களால், கண்முன் தன் நிறங்களை இழந்து வெளிறும் சமூகத்தவர்களால், இடர்களை நேர்நின்று எதிர்கொள்ளத் துணிந்தவர்களால், இந்தப் பிறவற்றால் ஆனது. இந்தக் கதைகளில் கதைசொல்லி சிறுமியாக, மாணவியாக, களப்பணியாளராக, வளர்ந்த மகளாக, மத்திமவயதை உடையவளாக, 'மௌசிஜியாக, தீதியாக' பல வயதுகளில் வருகிறாள். கதைகளுக்குள் ஊடாடி வரும் சங்கீதமும் பெண்களுக்குள் நிகழும் உறவில் வெளிப்படும் இசைமையும் தாளலயத்தோடும் வெளிப்படுகிறது. பெரிய அலையாகவும் பிரம்மாண்டமானதாகவும் நுரையாகவும் பின் கூடிவந்து சேர்வதாகவும் பிறகு குலைந்து போகக்கூடியதாகவும் மீண்டும் எழக்கூடியதாகவும் மூழ்கக்கூடியதாகவும் தூக்கி எறியக்கூடியதாகவுமான ஆக்கங்களைக் கொண்ட அம்பையின் மொத்த புனைகதைகளின் உலகம் இது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165480706299,"sku":"","price":990.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/b228ee84320fe92f2b749a950c2defaf.jpg?v=1705503846"},{"product_id":"ambedkar-kadithangal","title":"அம்பேத்கர் கடிதங்கள் | AMBEDKAR KADITHANGAL","description":"AMBEDKAR \u003cspan data-mce-fragment=\"1\"\u003eKADITHANGAL - அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பம், புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கை, அனைத்திற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் அவரது நோக்கத்தை இக்கடிதங்கள் காண முடியும். தீவிரச் செயல்பாட்டில் ஈடுபடும் வலிமையின் இதயம் கொண்டவரை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வேண்டுபவரை, மாயைகளை உடைப்பவரை, நகைச்சுவை உணர்வும் பகடியும் கைவரப்பெற்ற மனிதரைக் காணமுடியும் இத்தொகுப்பில். எப்போதும் போராட்டத்திலேயே உழன்று கசப்பின் தழும்புகளைக் கொண்டிருந்தவர் அம்பேத்கர். அவரது மென்மையை, சாதி, மத, இன, பிரதேச, மொழி, பாலின வேறுபாடுகளைக் கடந்த மொத்த மனிதகுலத்திற்கான அவரது தரிசனம், விலங்குகளின்பால்கூட நேசத்தைச் சுரந்த அவரது அன்பான இதயத்தை இக்கடிதங்களில் காண முடியும். அவரின் நெகிழ்ச்சியான சில முக்கியப் புள்ளிகளை இத்தொகுப்பில் தரிசிக்கலாம்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165480804603,"sku":"","price":495.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/503027d82c87ff8e51caebeab6ab32e3.jpg?v=1705734528"},{"product_id":"ambikavum-edward-jennarum","title":"அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் | AMBIKAVUM EDWARD JENNARUM","description":"AMBIKAVUM EDWARD JENNARUM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eமதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதன் முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றைக் களமாகக் கொண்டு புனைவு கலந்து இந்த நாவலை சுரேஷ்குமார இந்திரஜித் கையாண்டிருக்கிறார். அம்பிகாவின் காதலையும் சனாதனத்திற்கு எதிரான போராட்டங்களையும் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கான லட்சியங்களையும் நாவலில் நுட்பங்களுடன் சித்தரித்துள்ளார். வரலாறும் புனைவும் யதார்த்தமும் கலந்தது இந்த நாவல். சுரேஷ்குமார இந்திரஜித் புனைவு உலகத்தின் இன்னொரு பரிமாணம் இது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165480837371,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/e400f40dba1ea656d607fdd8b0896e6d.jpg?v=1705503747"},{"product_id":"amirtham","title":"அமிர்தம் | AMIRTHAM","description":"அமிர்தம் - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eதமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் 'அமிர்தம்'. 'கிராம ஊழியன்' இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. தி.ஜா.வின் முதல் நாவல் என்ற தகுதியை மீறி அவரது பிந்திய நாவல்களில் வெளிப்படும் கலை நுட்பங்களின் ஆரம்பச் சாயல்களைக் கொண்டது என்ற பெருமையும் இந்த நாவலுக்கு உண்டு. ஆண் - பெண் உறவில் சக மதிப்பு, பரஸ்பர விழா, பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தோழமை என்ற உறவுநிலைச் சித்தரிப்புகளுடன் தஞ்சை வட்டார மொழி, கிராமியப் பின்னணி, இயற்கையின் மானுடத் தோற்றம் என்ற பிற்கால நாவல்களில் வெளிவந்த இயல்புகளின் மூல உதாரணங்களை 'அமிர்த'த்தில் காணலாம். கூறு மொழியால் பழையதாகத் தென்பட்டாலும் பேசு பொருளால் என்றும் புதிதாகத் தோணிக்கும் நாவல் இது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165480870139,"sku":"","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/103b2576798ff28624f8a0cbf51a5bb8.jpg?v=1705734441"},{"product_id":"amma-oru-kolai-seithal","title":"அம்மா ஒரு கொலை செய்தாள் | AMMA ORU KOLAI SEITHAL","description":"AMMA ORU KOLAI SEITHAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஅம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர். பெருமிதம் கொள்ளத்தக்க தனித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்தவர். வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கும் அம்பையின் கதைகள் பெண்ணானவள் கொல்லப்படுகிற ரணங்களிலிருந்து மீண்டெழுந்து சொல்லப்பட்டவை. முன்னுரையில் அனார்\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165480902907,"sku":"","price":325.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/46b3f9265f87b035b00d17fc668357cb.jpg?v=1705734397"},{"product_id":"amma-vanthal","title":"அம்மா வந்தாள்","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165480935675,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/81gnZFo0J0L._SY425.jpg?v=1708438539"},{"product_id":"ammerikakari","title":"அம்மேரிக்ககாரி","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165481001211,"sku":"","price":230.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/91jiSG_ZvXL._SY425.jpg?v=1708438647"},{"product_id":"amudhey-marunthu","title":"அமுதே மருந்து | AMUDHEY MARUNTHU","description":"AMUDHEY MARUNTHU - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eமூன்றாண்டுகளில் ஐந்து பதிப்புகள் கண்ட 'உணவே மருந்து' நூலின் இரண்டாம் பாகம் இந்நூல். உடலை அன்னமய கோசம் என்று அழைக்கிறோம். இந்த அன்னமய கோசத்தைப் பாதுகாக்க முறைப்படி உண்ணுதல் என்பது அவசியமாகிறது. சாப்பிட்ட உடனே சாப்பிடுதல் எனும் அத்யசனம், ஆகார விதிகளை மதிக்காமல், கை, கால் கழுவாமல், காலம் தவறி பாடிக்கொண்டு, சிரித்துக்கொண்டு உண்ணும் விஷமாசனம் தவிர்க்கப்பட வேண்டிய சாஸ்திரங்கள் போதிக்கின்றன. இறைவன் உணவைச் செமிக்கின்ற அக்னி வடிவமாக வைஸ்வானரனாக இருக்கிறான் என்று இந்து சமய அற நூல்களும் போதிக்கின்றன. இந்நூலில் பண்டையத் தமிழரின் உணவு, உணவுப் பழக்கம், ஐவகை நிலங்களில் விளையும் உணவுகள், உணவுப் பொருட்களின் தனிப்பட்ட குணங்கள், சமையல் குறிப்புகள் போன்ற விவரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. முன்னூறுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாரிக்கும் முறைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165481066747,"sku":"","price":425.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/c2cbc5c5ee0450582a6a71c044dda756.jpg?v=1705734278"},{"product_id":"anbae-aaramudhe","title":"அன்பே ஆரமுதே | ANBEY AARAMUDHE","description":"அன்பே ஆரமுதே - \u003cspan data-mce-fragment=\"1\"\u003e“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்களில் மிகவும் ஜனரஞ்சகமானது 'அன்பே ஆரமுதே'. வெகுஜன இதழில் தொடராக வெளிவந்தால் மட்டுமல்ல; கதையோட்டத்தில் நிகழும் நாடகத் தருணங்கள் எதிர்பார சுவாரசியத்தைக் கொண்டிருப்பதும் காரணம். ஆன்மீக ஈடுபாடு முற்றிய அனந்தசாமி திருமண நாளன்று துறவறம் பூண்டு ஓடுகிறார். சந்நியாசியாக அலைகிறார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதே மணப் பெண்ணிடம் வந்து சேர்கிறார். இந்தக் கால ஓட்டத்தில் நேரும் உளவியல் சிக்கல்களையும் உறவுப் பிணைப்புகளையும் சொல்கிறது நாவல். இளமையில் விலகிப்போன இருவர் முதுமையில் மணமுடிக்காத தம்பதியராகவும் பெறாத பெண்ணுக்குப் பெற்றோராகவும் மாறும் அதிசயமே கதையின் மையம். அதைக் கலைப் பண்புகள் துலங்க தி. ஜானகிராமனின் தேர்ந்த கை இழைத்திருக்கிறது. இன்று எழுதப்பட வேண்டிய கதையை அரை நூற்றாண்டுக்கு முன்னரே அவரது படைப்பு மனம் யோசித்திருக்கிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165482344699,"sku":"","price":525.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/41af05eca47f23ace918ed1bdc64c5bb.jpg?v=1705503452"},{"product_id":"anjanak-kanni","title":"அஞ்சனக்கண்ணி | ANJANAK KANNI","description":"அஞ்சனக் கன்னி - \n\u003cdiv class=\"row d-flex justify-content-center\" data-mce-fragment=\"1\"\u003e\n\n\u003cdiv class=\"col-lg-9 col-12\" data-mce-fragment=\"1\"\u003e\n\n\u003cdiv class=\"product__info__detailed\" data-mce-fragment=\"1\"\u003e\n\n\u003cdiv class=\"tab__container\" data-mce-fragment=\"1\"\u003e\n\n\u003cdiv class=\"pro__tab_label tab-pane fade show active\" id=\"nav-about\" role=\"tabpanel\" data-mce-fragment=\"1\"\u003e\n\n\u003cdiv class=\"description__attribute\" data-mce-fragment=\"1\"\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003eகவிஞர் என்ற தொழில்நெறியாளர் அபூர்வமாகச் சென்று சேரும் இடங்களைக் கவிதையின் தாதுநிலையில் சஹானா பிடித்திருக்கிறார். இயற்கைக்கு மிக அருகிலிருக்கும்போது உணரும் பேதமற்ற தன்மையையும் எல்லையற்றது தரும் தவிப்பையும் எதுவும் தீராத போத உணர்வையும் இந்தக் கவிதைகள் இயற்கையாக இறகுகளைப் போலச் சுமக்கின்றன; தித்திப்புடன் சுவைக்கின்றன. -சங்கர்ராமசுப்ரமணியன் 'அவ்வளவு பெரிய மலைகளைப் பார்க்கும் சின்னக் கண்களுடன்' சஹானாவாக வேண்டும்; அன்றாட வாழ்க்கையின் வழமைகளை உதறி சஹானாவைப்போல ஒரு மீனாக வேண்டும் என்றெல்லாம் தோன்றுகின்றன இத்தொகுப்பைப் படித்தால். சூழலியலுக்கும் சஹானாவுக்கும் 'பூனையின் மீசை' அளவுக்குக்கூட இடைவெளி இல்லை. எல்லாமுமாக அவள் மாறிப்போவது அற்புதமாக இருக்கிறது. சஹானாவின் கவிதைகள் வழியாகக் கேட்பது பலநேரம் ஒரு குழந்தையின் தூய இசைக்குரல், சிலநேரம் தேர்ந்த தாயின் மெல்லிய கேவல். உண்மையில் சஹானாவின் அந்தச் சின்னக் கண்கள் வழியாக இந்தப் பெரிய வாழ்க்கையை, இயற்கையைப் பார்க்க வேண்டும். இன்று நிதானமாக ஒரு பூனையைப்போல வாசிக்க வேண்டும் மறுபடியும்... மறுபடியும்... -சந்தோஷ் நாராயணன் - ஓவியர்\u003c\/p\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003cbr data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\n\n\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e\n\n\u003cdiv class=\"wn__related__product ft__content\" data-mce-fragment=\"1\"\u003e\n\n\u003cdiv class=\"section__title text-center pt--50\" data-mce-fragment=\"1\"\u003e\u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165482606843,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/026e1edf4bdb974ece6ae056ca3efb54.jpg?v=1705734194"},{"product_id":"anjuvannan-theru","title":"அஞ்சுவண்ணம் தெரு | ANJUVANNAN THERU","description":"ANJUVANNAN THERU - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஉருவமும் அருவமுமாக ஒன்றிலொன்றாய்ப் பின்னி வாழ்வோரைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட அபூர்வமான படைப்பு. இதற்கு இணையாகவே பழமையும் புதுமையுமான மதக் கருத்தியல்கள் அம்மக்களின் வாழ்வை ஊடறுக்கின்றன. அபூர்வமான வாழ்க்கை முறைக்குள் தானும் அல்லாடுவதைப்போல பாவனை காட்டும் படைப்பாளி அப்படியே விலகியும் செல்கிறார். துயரம் என்னவெனில், அவர்கள் தமக்கென இருக்கும் வாழ்வை எத்தனம் செய்ய முடியவில்லை. மாறுபட்ட இரு கருத்தியல்களுக்குள் சிக்கிக்கொள்கிறது அவலத்தோடு பீமுடுக்குத் தாவி ஓடுகிறார்கள்; குத்துண்டு மாள்கிறார்கள். பின்னர் அபூர்வக் குதிரை மீதேறி நாள் ஆகாசம், சொர்க்கப் பூங்காவனம், பூங்காவனத்தில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் ஹுருல்ஈன் பெண்கள் என வானுலக சஞ்சாரமும் கொள்கிறார்கள். இப்படியான வாழ்வின் அலைவுறும் பிம்பமே 'அஞ்சுவண்ணம் தெரு'.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165482639611,"sku":"","price":325.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/e21abf7f44d5287d9f94844e9fc1ed1d.jpg?v=1705503141"},{"product_id":"anru-veru-kizhamai","title":"அன்று வேறு கிழமை | ANRU VERU KIZHAMAI","description":"ANRU VERU KIZHAMAI - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வு நிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலும் பிரதிபலிக்கும். கவிஞன் கையாளும் வடிவம் அவன் கருதும் மையப் பொருளையும் பாதிக்கும். அதற்குப் பொருந்தும் மிகச் சரியான உதாரணங்களில் ஒன்றாக ஞானக்கூத்தன் கவிதைகள் உள்ளன. வெளிவந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் 'அன்று வேறு கிழமை' சமகாலப் பொருத்தமுடைய கவிதைகளின் தொகுப்பாகவே படுகிறது. புதுப்புது அபத்தங்களைத் தரிசித்துக்கொண்டிருப்பதும் அதன் எதிர்வினை இந்தக் கவிதைகளில் காண முடிவதுதான் காரணமாக இருக்குமோ?\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165482672379,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/60fe1c4df29be528e6ed986567a2440f.jpg?v=1705468804"},{"product_id":"antha-naalin-kasadugal","title":"அந்த நாளின் கசடுகள் | ANTHA NAALIN KASADUGAL","description":"ANTHA NAALIN KASADUGAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eதுச்சமாக எண்ணும் உறவும் பகைமைகொண்ட நகரமும் இறந்த மனைவியை அடக்கம் செய்ய வேண்டிய கடமையும் அதற்கான பணமின்மையும் அலைக்கழிக்க, போதமின்றித் தெருக்களில் திரியும் தனியனான ஒருவனின் இரண்டுநாள் கதையே இந்தக் குறுநாவல். தன்னை ஒப்புக்கொடுத்த அவனை ஆன்மீக வெளிப்பாடுகள் சில தொட்டுச் செல்கின்றன. இறுதிவரை வீடுதிரும்பாத அவன், அலைக்கழித்தவை மறைய, மாயச் சூழல் தோற்றுவிக்கும் விடுதலையைக் கண்ணுறுகிறான். பின்நவீனத்துவக் கதையாடலின் அனைத்துச் சாத்தியங்களும் தொழிற்படும் களம் இப்புனைவு.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165483000059,"sku":"","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/959f73b60d1edce288e908ecf25c67f5.jpg?v=1705502997"},{"product_id":"antharam","title":"அந்தரம்","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165483131131,"sku":"","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/71eozlCzx1L._SY425.jpg?v=1708438697"},{"product_id":"anthiyil-thigalvathu","title":"அந்தியில் திகழ்வது | ANTHIYIL THIGALVATHU","description":"ANTHIYIL THIGALVATHU - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eதான் எதிர்கொள்கிற கணங்களில் ஒளிந்திருக்கும் வேறொன்றை அத்துணை ஆசையோடு கண்டடையும் இக்கவிதைகள், நழுவும் அழகிற்காகவும் தருணத்து உண்மைக்காகவும் விழிப்புடன் தன்னைத் திறந்துவைக்கின்றன. இயற்கையின் முன்மர்ந்து மானுட மனம் எப்படியெப்படியெல்லாம் பையப் பைய குணமடைகிறது? அப்பாலும் இப்பாலும் ஒன்றையொன்று எந்த அளவுக்குச் சார்ந்துள்ளன? பார்த்தல் எனும் உயிர்ச்செயல்பாடு பிரார்த்தனைக்கும் ஊழ்கத்திற்கும் எப்புள்ளியில் இணைகிறது? போன்றவற்றை அணுக்கமாக உணர்த்துவதன் மூலம் ஓர் அடர்ந்த சாயங்காலப்பொழுதின் பரவசத்தை, தொலைவை, இன்னொரு உலகத்தன்மையை, விடுதலையை, மோனத்தை என யாவற்றையும்அளிக்கும் கவிதைகள் இவை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165483163899,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/064a92d72c9b576efdadb17277d13412.jpg?v=1705734112"},{"product_id":"aparajithan","title":"அபராஜிதன்","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165483196667,"sku":"","price":450.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/71f3428sqtL._SY425.jpg?v=1708675402"},{"product_id":"apoorva-manithargal","title":"அபூர்வ மனிதர்கள் | APOORVA MANITHARGAL","description":"APOORVA MANITHARGAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eகச்சிதமும் உயிரோட்டமும் கொண்ட தி. ஜானகிராமன் சிறுகதைகளுக்கு கொஞ்சமும் குறைவு படாதவை அவர் தீட்டிய அனுபவச் சித்திரங்கள். கதைகளின் இலக்கியக் கோரிக்கைகளை உருவாக்காமல் மிகச் சுதந்திரமான போக்கில் எழுதப்பட்டவை இவை. இந்த புனைவல்லாத எழுத்துக்களின் சிறப்பு, அவை முற்றிலும் மனிதர்களையும் அவர்களது செயல்களையும் பேசுபொருளாகக் கொண்டவை. இதில் இடம்பெறும் மனிதர்கள் பெரும்பாலும் விசித்திரமானவர்கள் அல்லது அவர்களுக்கு வாய்க்கும் சூழல் விந்தையானது. இந்த விசித்திரர்கள் இயல்பான நடைமுறையை எப்படி விநோதமானதாக மாற்றுகிறார்கள் என்றும் விந்தையான சூழல், எளிய மனிதர்களை எவ்வளவு அபூர்வமானவர்களாக மாற்றுகிறார்கள் என்றும் நெருங்கியும் விலகியும் பார்த்து நுட்பமாகத் தீட்டுகிறார் ஜானகிராமன். அவரது புனைகதைகள் தரும் வாசிப்பு இன்பத்தை இந்த புனைவல்லாத எழுத்துக்கள் அளிக்கின்றன. இவை அவரது கலை மேதமையின் சான்றுகள் கூட.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165483229435,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/a9bd01e9b71808ae8c9771eb5eb923f4.jpg?v=1705502816"},{"product_id":"aravi","title":"அரவி","description":"","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165483294971,"sku":"","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/81GzUA4uX0L._SY425.jpg?v=1708675441"},{"product_id":"arthanaari-240","title":"அர்த்தநாரி | ARTHANAARI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eARTHANAARI - 'மாதொருபாகன்' நாவலின் இரு கோணங்களை விரித்து 'அர்த்தநாரி', 'ஆலவாயன்' ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளது. பெண் மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது 'அர்த்தநாரி.' அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக்கழிக்கும் விதத்தை நாவல் பற்றிச் செல்கிறது.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165483917563,"sku":"","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/9f8a4be32ff647fbc06b585212a9be30.jpg?v=1705297733"},{"product_id":"aruntha-kadhin-thanimai","title":"அறுந்த காதின் தனிமை | ARUNTHA KAADHIN THANIMAI","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eARUNTHA KADHIN THANIMAI - எமிலி டிக்கன்சன், குருதத், திருப்பூவனத்து பொன்னனையாள், அங்கம் வெட்டுண்ட பாணன், ஆஹா சாகித் அலி என மேற்கு கிழக்கும் முயங்கி நிறைவேறாமையின் வலியும் சுமையும் நிறைந்த சிலுவையோடு, கவிதைப் பாத்திரங்களாக அலையும் கடையைப் பூட்டிவிட்டு, தொல் தமிழ் மரபின் நூலிழைத் தோளில் இருந்து வெளியேறும். ஜெயபாஸ்கரனின் சித்திரம், இக்கவிதைகளில் சன்னமாகத் தெரிகிறது. கடையிலிருந்து வெளியேறும்போது, ​​வான்கோவின் மஞ்சளை எடுத்துச் செல்கிறார் ஜெயபாஸ்கரன். கடையில் அறையப்பட்ட இருப்பில், தான் புதைந்து நசிவதையும், கடையின் இருளையே கர்ப்பத்தின் பாதுகாப்பாக ஒசிந்து ஒழுகுவதையும், நமது தனிப்பட்ட பிரபஞ்சங்களின் சாயலோடு அடையாளம் காணச் செய்ததுதான் ஜெயபாஸ்கரனின் சாதனை. கடை, தன்னைப் பூட்டிக்கொண்டு ஜயபாஸ்கரனை வெளியேற்றிவிட்டது. ஜெயபாஸ்கரன் உருவகித்து வைத்திருந்த சின்னஞ்சிறு தனிப்பிரபஞ்சம், இத்தொகுப்பில் உள்ள உரைநடைக் கவிதைகள் வழியாக நீட்சியையும் நிறையவும் அடைந்துள்ளது. தமிழ் இலக்கிய மரபின் சுமையை இறக்க முயன்று, அந்த கர்ப்பப் பாதுகாப்பிலிருந்து வெளியேறி 'நவீன' கவிஞனாக, நெடுங்காலத்துக்குப் பிறகு உணர்ந்து, காலை எட்டிவைத்து இன்னொரு பயணம் தொடங்கியவனின் கதை இந்தக் கவிதைகள்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165484703995,"sku":"","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/c754e5ca353f7cf3437931930f1be691.jpg?v=1705468719"},{"product_id":"aruvadaikalachuvadu","title":"அறுவடை | ARUVADAI","description":"அருவடை - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஆர். சண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல 'குறுநாவல்' என்னும் வரையறைக்குள் அடங்குபவை. அவற்றுள் 'அறுவடை'க்கு முக்கியமான இடம் உண்டு. பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த சண்முகசுந்தரம் 'அறுவடை'யை எழுதினார். புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் புதுமை செய்யும் உணர்வெழுச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற நாவலாக இது உருவாயிற்று. மொழியும் வாழ்வியலும் இணைந்திருப்பதோடு மாந்தர்களின் மனப் போராட்டங்களை அவர் கையாண்டிருக்கும் விதமே இன்றைக்கும் இந்நாவலைப் புதுமையுடன் விளங்கச் செய்கிறது. அவரது எழுத்துக்களில் துலங்கும் 'பெண் நோக்கி' இந்நாவலில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்நாவல் குடத்தில் இருந்து இப்போது வெளியுலகுக்கு வருகிறது. இனியேனும் இதன் வெளிச்சம் பரவ வேண்டும்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165484736763,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/5dd62d078b1d4bb91ac51c4ae4d7a518.jpg?v=1705468634"},{"product_id":"asakava-thaalam","title":"அசகவ தாளம் | ASAKAVA THAALAM","description":"ASAKAVA THAALAM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஇன்று வாழ்வை முழுநேரமும் தர்க்கப்படுத்திக்கொண்டிருக்க\u003c\/span\u003e \u003cspan data-mce-fragment=\"1\"\u003eம் மனப்போக்கிற்கு மத்தியில் சின்னச்சின்ன சுவாரஸ்யங்களால் பிரபஞ்சத்தின் மறுபக்கத்தைத் திறந்துகாட்ட முனைகிறது கவிதை. சில இடங்களில் படிமங்களாக, உருவங்களாக, சில இடங்களில் அகச்சிக்கல்களாக, சில இடங்களில் சிந்தனைகளாகத் தேங்கிவிட்ட ஞாபகங்களை அன்றாட வாழ்க்கையில் வைத்து அர்த்தம் தேடும் முயற்சியை பெரும் விஷ்ணுகுமாரின் கவிதைகள் கச்சிதமாகவே செய்கின்றன. தன்னிச்சையாகத் தோன்றும் சிறுசிறு வியப்புகளையும் நெகிழ்வான, எளிமையான மொழியின் மூலம் கூறிச்செல்கின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். இவற்றைக் குழந்தைமையின் அழகியலோடும் அதேசமயம் அப்பட்டமான குரூரங்களோடும் உலகைக் காணவிரும்பும் ஒருவனின் படைப்புகள் என்று குறிப்பிடலாம்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165484769531,"sku":"","price":100.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/4179d3c5d578e1f4ca9b3b3e3f3c1fa1.jpg?v=1705468490"},{"product_id":"aththaiku-maranamillai","title":"அத்தைக்கு மரணமில்லை | ATHTHAIKKU MARANAMILLAI","description":"\u003cp data-mce-fragment=\"1\"\u003eATHTHAIKKU MARANAMILLAI - மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் விதவையாக்கப்பட்ட அத்தையம்மாவுக்கு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட இளமைகாலக் கனவுகள், ஆசைகள் இவற்றின் இடத்தை அவர் வைத்துக்கொண்டிருக்கும் நகைகளின் மதிப்பு அளித்துள்ள அதிகாரம் ஈடுபடுத்துகிறது. மரணத்திற்குப் பிறகும் அவரது ஆசைகள் மடிவதில்லை; மணமாகி அக்குடும்பத்துக்குள் வரும் மருமகளிடம் நகைப்பெட்டியை ஒப்படைத்த பின்பும் நகைகள்மீது அவருக்கிருக்கும் பிடிப்பு போய்விடவில்லை. அவரது ஆவி அவளைக் கண்காணித்தபடியே இருக்கிறது. எளிய குடும்பத்திலிருந்து வரும் மருமகளுக்கு தனது துணையைத் தேர்வுசெய்யும் உரிமை இல்லை என்றாலும், தானும் தடுமாறிக்கொண்டிருக்கும் தனது குடும்பமும் செல்லவேண்டிய பாதையை முடிவுசெய்யும் துணிச்சலை நகைப்பெட்டி அளிக்கிறது. மூன்றாவது தலைமுறையினரான அவளது மகளுக்கு தனக்கான இலக்கையும் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. நகைப்பெட்டிக்கு அவளிடம் வேலையில்லை. அத்தையம்மாவின் ஆசைகள் இவள்மூலமாக நிறைவேறுகிறதா?\u003c\/p\u003e\n\n \u003cp data-mce-fragment=\"1\"\u003e\u003c\/p\u003e\n\n\u003cp data-mce-fragment=\"1\"\u003eஇயல்பான மொழியில் உயிரோட்டமான நடையில் ஒரு மர்மக்கதையின் விறுவிறுப்புடன் புனையப்பட்டிருக்கிறது இந்தக் குறுநாவல்.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165485981947,"sku":"","price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/26a5c1da04278cedc697e5d4da64820c.jpg?v=1705297650"},{"product_id":"avan-aanathu","title":"அவன் ஆனது | AVAN AANATHU","description":"AVAN AANATHU - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eசா. கந்தசாமியின் நாவல்களில் உளவியலுக்கு முக்கியத்துவம் தரும் நாவல் 'அவன் ஆனது'. எதிரில் உட்கார்ந்திருப்பவரிடம் பேசும் தோனியில், காலத்தில் முன்னும் பின்னுமாய் நகர்ந்துசெல்லும் கதையாடல் இதன் தனித்த அம்சம். 1981இல் வெளிவந்த இந்த நாவல் பொதுவாக அன்றைய நாவல்களில் காணப்படும் தொடக்கம், மையப் பிரச்சினை, முடிவு என்பனபோன்ற சம்பிரதாயமான கட்டமைப்பைத் தவிர்க்கிறது. சொல்லப்படும் கதை ஒரு தளத்தில் முன்னகர, சொல்லப்படாத இன்னொரு கதையும் இணைச்சரடாக ஓடுகிறது. வெளிவந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின் வாசிக்கும்போது புதிதாகவே இருப்பது இதன் வலிமை.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165486047483,"sku":"","price":275.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/f1a14b14c01a398649c5759b7b8b73a2.jpg?v=1705502294"},{"product_id":"ayothithasar-aayvugal","title":"க. அயோத்திதாசர் ஆய்வுகள் | AYOTHITHASAR AAIVUGAL","description":"AYOTHITHASAR AAIVUGAL - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eக. அயோத்திதாசர் (1845 - 1914) என்ற பௌத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்றி முழு உலகிற்கே ஒளியாக உதித்த கௌதம புத்தரின் அகிம்சையிலிருந்து உருப்பெற்றன. இதில் வன்முறையோ, ஆதிக்கமோ, புரோகிதமோ, சாதியோ, சமயமோ, கடவுளோ கிடையாது. மாறாகக் கருணையும் ஒழுக்கமும் சமத்துவமும் வினைத் தொடர்ச்சியும் உண்டு. ஒவ்வொருவனும் தன்னைப் பகுத்தறிவு மற்றும் அறம் சார்ந்த முறையில் உயர்த்திக் கொள்ளும் வழிமுறைகள் உள்ளன. சக மனிதனைச் சமமாக மதிக்கும் நேர்மை உண்டு. சாதி, மதம், நிறம், பால், இனம், நாடு, பொருள் ஆகிய அளவீடுகளின்றி சகமனிதரை அவர்களது செயல்களாலும் மொழியாலும் சிந்தனையாலும் பண்பாலும் ஒழுக்கத்தாலும் மதிப்பிடுகின்ற அணுகுமுறை உண்டு. இந்திய - தமழகச் சூழலில் சாதி மத பேதமற்ற யாருக்கும் இது சாத்தியமே என்பதை அயோத்திதாசரின் வாழ்க்கைப் பணிகளிலிருந்து அறியலாம். இங்கு மதங்களை மட்டுமல்ல, சாதிகளையும் விட்டால்தான் ஒருவனால் பண்பும் ஒழுக்கமும் உள்ள மாந்தனாக வாழ முடியும் என்பதை புத்தபிரான் வழிநின்று நிறுவியுள்ளார் தாசர். பிராமணராயினும் சரி, பிராமணரல்லாதாராயினும் சரி, ஆதிதிராவிடராயினும் சரி, பிராமணியத்தைப் பரிபூரணமாகக் கைவிட்டாலன்றி அவர்களுக்கு விடுதலை இல்லை; மாந்த வளர்ச்சி இல்லை; மானிட நேயமும் இல்லை என்பது தாசரின் தீர்க்கதரிசனம்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165486080251,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/9472565bd3e570ad1d47f3fabaebcf35.jpg?v=1705733146"},{"product_id":"ayothithasar-vazhvum-boutham","title":"அயோத்திதாசர் : வாழும் பௌத்தம் | AYOTHITHASAR VAAZHUM BOUTHAM","description":"AYOTHITHASAR VAAZHUM BOUTHAM - \u003cspan data-mce-fragment=\"1\"\u003eஒரு நூற்றாண்டை எட்டும் தருணத்தில் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்ட அயோத்திதாசரின் சிந்தனைகள்மீது ஆய்வுவெளிச்சம் பாய்ச்சும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நவீனகால தமிழ்ச் சிந்தனைகள்மீதும் செயல்பாடுகள்மீதும் மரபின் வேறிலிருந்து எழுந்துவந்து வினையாற்றிய அயோத்திதாசர் எனும் அரிய மூலிகைச்செடியை ஒத்த சிந்தனையாளர்கள் பற்றிய தனித்துவமான அவதானங்களை உரையாடல்களின்வழியே கண்டடைகிறது இத்தொகுப்பு. நவீன மனப்பாங்கால் கண்டறிய முடியாத கோணங்களை அவற்றின் மறைவிலிருந்து விலக்கி, விரிந்த பின்புலத்தில் வைத்துப் பேசிய அயோத்திதாசரை அவர் காலத்திலிருந்து சமகாலத்திலிருந்து மதிப்பிடப்பட்ட இத்தொகுப்பின் கட்டுரைகள். அயோத்திதாசர் என்னும் முழுமையைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு அவை உருவானவிதம், அவர் ஒன்றைப் புரிந்துகொண்ட \u0026amp; விளக்கியமுறை,அவற்றின் சமகாலப் பொருத்தம் ஆகியவற்றைக் கட்டுரைகளில் முன்வைக்கிறார் ஸ்டாலின். முதன்முறையாக இதுவரை அயோத்திதாசர் சார்ந்த பதிவுகளிலிருந்து கவனம்பெறாத தரவுகளைத் திரட்டி எழுதப்பட்டிருப்பதும் இத்தொகுப்பின் தனித்துவம்.\u003c\/span\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165486113019,"sku":"","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/54293b6dc94cbc3722d34719583f1d94.jpg?v=1705733054"},{"product_id":"azhagil-kothikkum-azhal","title":"அழகில் கொதிக்கும் அழல் | AZHAGIL KOTHIKKUM AZHAL","description":"அழகில் கொத்திக்கும் அழல் -\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும்,\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eஅது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும்,\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eநவீன கவிதைகளைச் சாட்டையெனவும் பாவித்து இசை சுழற்றுகையில் உண்மையில் பெரும் ஆட்டம் கழன்றுவிடுகிறது.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eகாமத்தையும் காதலையும் அழகையும் ஆன்மீக நிலையில் வைத்து பார்க்கும் இசையின் கண்களில் கொஞ்சம் திவ்யம் கூடியிருக்கிறது.\u003c\/p\u003e\n\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e -\u003cspan data-mce-fragment=\"1\"\u003e \u003c\/span\u003eசாம்சன்\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165486145787,"sku":"","price":130.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/7524c10df93140fe5a8a7e11768eb883.jpg?v=1705732994"},{"product_id":"azhagin-asaivu","title":"அழகின் அசைவு | AZHAGIN ASAIVU","description":"அழகின் ஆசை -\n\u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003e தமிழ்ப் பேராசிரியராகிய தொ.ப. பார்வைக் கூர்மையில் புறநானூறு முதல் புதுக்கவிதை வரை, தொல்காப்பியத்திலிருந்து தற்காலப் பழகுதமிழ் வரை துலங்குவதை விட்டுச் சொல்லவேண்டியதில்லை.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eதாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பிரிவினர் ஒரு காலத்தில் சமயக் குருமார்களாக இருந்த வரலாற்றுச் சுவடுகள், மொட்டையடித்தல் என்னும் பௌத்த வழிபாட்டு முறையின் தொடர்ச்சி, சமண நியாய பரிபாலனப் பெரும்பள்ளி பகவதி அம்மன் கோயிலாக வழிபடுதல், வைணவ வழிபாட்டில் வைதிகத் 'தூய்மை' கடந்த வெகுமக்கள் பண்பாட்டுச் செல்வன் முருகன், வள்ளி மணவாளன் முருகன். என்றெல்லாம் ஆன காலத்தில் தெய்வானை சேர்ந்த கதை, துலுக்க நாச்சியார் அழகரின் காதலியான கதை, தாய்த்தெய்வ வழிபாட்டின் செல்வாக்குக் கத்தோலிக்கத் தேவமாதாவிடம் புலப்பட்ட வரலாறு, தைப்பூசத்தில் தமிழ்ப் புத்தாண்டு காணுதல் எனச் சாதிகள், சமயங்கள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் போன்ற பண்பாட்டின் பொதுப் போக்குகள் ஒருபுறம்.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eஉலையிலேயே உப்புப் போடுதல், உப்பைத் தனியே உணவுடன் சேர்த்தல் என்னும் தமிழர்களின் சமூகப் படிநிலைகள், தமிழகத்தின் இயல்பான தின்பண்டங்கள், வந்து புகுந்த அல்வா முதலியவை, இயல்பாக உடுப்பவை இரண்டுடன் புடைவை முதலியன வந்து புகுதல், உரல் உலகம் முதலிய புழங்குப் பொருட்கள், உறவுப் பெயர்களில் பொதிந்திருக்கும் மரபு, தவிட்டுத் தத்தெடுக்கும் வழக்கம், பேரப்பிள்ளைகளுக்கும் சடங்குகள் இறப்பிலும் விருந்தோம்பல், கருவுற்ற பெண் கணவனை இழந்த நிலையில் அதனை அறிவிக்கும் நாகரிகக் குறியீட்டு சடங்கு, மரபார்ந்த பல்லாங்குழி முதலிய விளையாட்டுகளின் சமூக-பொருளாதாரப் பின்னணி என உணவுகள், உடைகள், விளையாட்டுகள் என அன்றாடப் பண்பாட்டு அமிசங்கள் மறுபுறம்.\u003c\/p\u003e\n\n \u003cp style=\"font-weight: 400;\" data-mce-fragment=\"1\" data-mce-style=\"font-weight: 400;\"\u003eஇன்னும் இன்னும் எத்தனையோ! அவரது அனைத்துப் பண்பாட்டுக் கட்டுரைகளின் பெருந்தொகுப்பாக வாய்த்த இந்நூல் அறிஞர்களின் ஆய்வுத் துல்லியம்; ஆய்வாளர்களுக்குக் கருத்துகோள் களஞ்சியம்; பொதுவாசகருக்கு முன்னறியாப் பல்சுவை விருந்து.\u003c\/p\u003e","brand":"KALACHUVADU","offers":[{"title":"Default Title","offer_id":45165486178555,"sku":"","price":295.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0681\/1684\/0699\/files\/4a552c118e269adf4aba28ce1aefb231.jpg?v=1705732922"}],"url":"https:\/\/www.jayambookcentre.com\/ta\/collections\/tamil-collections.oembed?page=253","provider":"Jayam Book Centre","version":"1.0","type":"link"}